டோக்கியோ, மார்ச் 14- அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை வாங்குவதில் உலகிலேயே மூன்றாவது இடத்தில் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக ஜப்பான் இருப்பதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக் கின்றன. உலகின் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் அமெரிக்காவின் ஆயுதங்கள் விநியோகமாகி வருகின்றன. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுகள், மன்னர் ஆட்சிகள், சர்வாதிகாரிகள், பயங்கரவாத அமைப்புகள் என்று அனைத்துத் தரப்பினருக்கும் ஆயுதங்கள் விற்பனையா கின்றன. தங்கள் ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டால்தான் மீண்டும் ஆயுதங்கள் வாங்கு வார்கள் என்று பல பகுதிகளில் அமெரிக்காவே சண்டைகளைத் தூண்டி விடுகிறது என்ற குற்றச்சாட்டுகள் வலம் வந்து கொண்டிருக் கின்றன. சவூதி அரேபியாதான் உலகிலேயே அதிக மான அளவுக்கு ஆயுதங்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்கிக் கொண்டிருக்கிறது. இத்த னைக்கும் சவூதி அரேபியாவுக்கு வேறு எந்த நாட்டிடம் இருந்தும் மிரட்டல்கள் இல்லை. சவூதி அரேபியாதான் ஏமன் மீது கடுமை யான தாக்குதல்களை நடத்துகிறது.
எந்தெந்த நாடுகள் எவ்வளவு ஆயுதங்கள் வாங்குகின்றன மற்றும் அவற்றின் மொத்த செலவில் ஆயுதங் களுக்காக எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்று அமெரிக்காவில் உள்ள சர்வதேசக் கொள்கை கவுன்சில் ஆய்வு செய்து பல்வேறு புள்ளிவிபரங்களுடன் வெளியிட்டிருக்கிறது. இந்தப் புள்ளி விபரங்களைச் சுட்டிக்காட்டி யுள்ள ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் பணத்தையெல்லாம் ஆயுதங்களுக்காக ஜப்பான் தாரை வார்த்துக் கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது. சர்வதேசக் கொள்கை கவுன்சிலின் ஆய்வறிக்கையில் இருந்து பல்வேறு புள்ளிவிபரங்களுடன், ஒரு ஆய்வறிக்கையை ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி யின் நாடாளுமன்ற உறுப்பினர் யமசோ டாகு உருவாக்கியுள்ளார். அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கும் நாடுகளில் மூன்றாம் இடத்தில் ஜப்பான் இருக்கிறது என்று டாகு சுட்டிக்காட்டுகிறார். மேலும், தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக முதல் மூன்று இடங்களில் ஒன்றாக ஜப்பான் இருந்து வருகிறது. இந்தப் புள்ளிவிபரங்கள் ஜப்பானின் மேல்சபை பட்ஜெட் குழுக் கூட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி யது. தனது விவாதத்தை இந்த விபரங்களோடு தொடங்கிய டாகு, ஏராளமான ஆயுதங்களை அடுக்கிக் கொண்டே செல்வது பற்றிப் பல்வேறு கேள்விகளை எழுப்பி அரசுத்தரப்பை துளைத்தெடுத்தார். பிற எதிர்க்கட்சிகளின் குழு உறுப்பினர்களும் டாகுவுடன் இணைந்து கொண்டு துணைக் கேள்விகளை எழுப்பி னார்கள்.
பாதுகாக்கப்படும் அமெரிக்க நலன்
அதோடு, அண்மையில் நடந்த அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டங்களில், அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளுக்கு போதிய நிதி தேவை என்று கோரிக்கை வைக்கப் பட்டிருந்தது. டொனால்டு டிரம்ப் ஜனாதிபதி யாக இருந்தபோதும் இத்தகைய கோரிக்கை கள் வந்தன. அப்போது ராணுவத்திற்கான செலவை அதிகரிக்க வேண்டும் என்று அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளை அவர் கேட்டுக் கொண்டார். தற்போது, புதிய உடன்பாடுகளில் அமெரிக்க ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு போதிய நிதியை கூட்டாளிகளின் தலையில் கட்டும் அம்சங்களும் சேர்க்கப்படுகின்றன. தனது உரையின்போது, “ஆயுதங்களை வாங்குபவர்களின் பட்டியலில் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக ஜப்பான் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளது. அமெரிக்க அரசுக்கும், ஆயுதம் தயாரிக்கும் பெரு நிறு வனங்களுக்கும் நடமாடும் பணம் தரும் எந்திர மாக ஜப்பான் மாறிவிட்டது. இதற்கு பிரதமர் கிஷிடா பதிலளித்தாக வேண்டும்” என்று யமசோ டாகு குறிப்பிட்டார். அதற்குப் பதிலளித்த பிரதமர், “தேவையான ஆயுதங்களை சரியான விலையில் வாங்கியுள்ளோம்” என்றார். யமசோ டாகு விடவில்லை. “இவ்வளவு ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதை ஏற்றுக் கொள்ளவே முடி யாது. அமெரிக்க ஆயுதப்பெரு நிறுவனங்களின் நலன்களுக்காக இதை ஜப்பான் செய்யக் கூடாது” என்று வலியுறுத்தினார்.