world

img

இடதுசாரிகளை தேர்ந்தெடுக்கும் லத்தின் அமெரிக்க மக்கள்

லத்தின் அமெரிக்கா நாடான கவுத மாலாவில் நடைபெற்ற ஜனாதி பதி தேர்தலில் தி சென்டர்-லெஃப்ட்  மூவிமியன்டோ செமில் என்ற இடது சாரிக்கட்சியின்  தலைவர் பெர்னார்டோ அரேவலோ டி லியோன்  வெற்றி பெற்றுள்ளார்.இதே போல் ஈகுவடார் நாட்டில் ஆகஸ்ட் 20 அன்று நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் இடதுசாரி குடி மக்கள் புரட்சி இயக்கத்தின் கோன்சா லஸ் 33.31 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி கண்டு இரண்டாம் கட்ட தேர்த லிலும் வெற்றிவாகை சூட தயாராகி வருகிறார். லத்தின் அமெரிக்காவில் அமெரிக்க ஆதரவு வலதுசாரி தலைவர்களால் ஆளப்படும் நாடுகளில் பொருளாதார நெருக்கடி, வேலையின்மை, வன்முறை கள்,இயற்கை வளங்களைச் சூறையாட அனுமதிப்பது என மக்கள் விரோத ஆட்சியாக நடத்தப்படுகிறது. இந்த அடிப்படை பிரச்சனைகளில் இருந்து  நாட்டு மக்களை திசை திருப்பும் பொருட்டு வலதுசாரி ஆட்சியாளர்களின் ஆதரவு பெற்ற பல்வேறு போதைப்பொ ருள் கடத்தல் கும்பல்கள் மக்களை போதைக்கு அடிமையாக்கும் செயல்க ளை செய்து வருகின்றன.

இந்த வலதுசாரிகளின் ஆட்சிக்கு எதிராக அந்நாடுகளில் உள்ள இடதுசாரி, சோஷலிஸ்டு மற்றும் மைய-இடது (சென்டர்-லெப்ட்) உள்ளிட்ட இடதுசா ரிக்கட்சிகள் தொடர் போராட்டத்தையும் மக்கள் மத்தியில் தொடர் பிரச்சாரங்க ளையும்  முன்னெடுத்து வருகின்றன.லத்தின் அமெரிக்க நாடுகளின் ஒவ் வொரு தேர்தலிலும் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் குறித்தான விவாதங்கள் முக்கிய இடத்தை பிடிக் கின்றன. சமீபத்தில் நடைபெற்ற ஈகுவடார் தேர்தல் பிரச்சாரத்தின் போது பெர்னாண்டோ வில்லவிசென்சியோ போதைப் பொருட்கள் கடத்தல் கும்பல் கள்  கட்டுப்படுத்தப்படும், இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதில் இருந்து பாதுகாக்கப்படும் என்று  வாக்குறுதி கொடுத்தார். பிரச்சாரத்தை முடித்து  திரும்பும் பொழுது  அவர்   போதைப் பொருள் கடத்தல் கும்பலால் நாட்டின் தலைநகரிலேயே சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.   தற்போது அவருக்கு மாற்று வேட்பா ளராக நிறுத்தப்பட்ட லூயிசா கோன் சாலஸ்  எதிர்த்துநின்ற அந்நாட்டின் மிகப்பெரும் கோடீஸ்வர வேட்பாளரை விட அதிகவாக்குகள் பெற்று மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல ஆகஸ்ட் 20 அன்று கவுதமாலாவில் நடைபெற்ற இரண்டா வது சுற்று ஜனாதிபதித் தேர்தலில் பெர்னார்டோ அரேவலோ டி லியோன் வெற்றி பெற்றுள்ளார்.இது லத்தின் அமெ ரிக்க நாடுகள் முழுவதும் வலதுசாரி களை மக்கள் தூக்கி எறிந்து மக்கள் நல திட்டங்களை முன்னிறுத்திச் செயல்படும் இடதுசாரித் தலைவர்களை தேர்ந்தெ டுத்து வருகின்றனர் என்பதையே வெளிப் படுத்துகிறது.