world

img

மியான்மர் ராணுவத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடை உத்தரவில் கையெழுத்திட்டார் ஜோ பைடன்

மியான்மர் ராணுவத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடை விதித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார்.

மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த பொது தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆங் சான் சூச்சி தலைமையிலான ஆட்சியை மியான்மர் ராணுவம் கவிழ்த்தது. 
இதனை தொடர்ந்து மியான்மர் ராணுவம் ஆட்சியை கைப்பற்றி,  ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் வைத்தது. 
இது குறித்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் , “மியான்மர் ராணுவத்தின் முக்கியத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கிறேன் மியான்மர் அரசுக்கு அமெரிக்கா அளித்த நிதியை ராணுவம் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது அவர்களது குடும்பத்தினர் மீதும் அடங்கும்” என்று தெரிவித்தார். இதற்கான உத்தரவில் ஜோ பைடன் கையெழுத்திட்டார்.
ஆங் சான் சூச்சி விடுதலை செய்யப்பட வேண்டும் என ஐ. நா. உள்ளிட்ட அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளன.
.

.

;