world

img

புத்தாண்டு கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் உயிரிழப்பு  

அமெரிக்காவில் புத்தாண்டு தினத்தன்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.  

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள குல்ஃபோர்ட் நகரில் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விருந்தில் பலர் கலந்து கொண்டனர். புத்தாண்டு பிறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு திடீரென சிலர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பலத்த காயமடைந்தவர்களில் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.  

அதனைதொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என கல்ப்போர்ட் காவல்துறை அதிகாரி கிறிஸ்ரைல் தெரிவித்தார். மேலும் நிகழ்ச்சி நடந்த இடத்தில் 50க்கும் மேற்பட்ட துப்பாக்கி குண்டுகள் சிதறி கிடந்திருப்பதாகவும், பல்வேறு துப்பாக்கிகளிலிருந்து சுடப்பட்டவை என்றும் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் எத்தனை பேர் ஈடுபட்டுள்ளனர் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என காவல்துறையினர் தெரிவித்தனர்.