தென்கொரியாவில் அணுமின் நிலையம் அருகே காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவின் உல்ஜினின் கிழக்கு கடலோர பகுதியில் அணுமின் நிலையம் உள்ளது. அங்கு எதிர்பாரத விதமாக பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர். பலத்த காற்றுக்கு மத்தியில், சுமார் 1,000 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
இதையடுத்து அந்தப் பகுதியை தேசிய பேரிடர் பகுதியாக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்துள்ளார். அணுமின் நிலையத்தை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமர் முடுக்கி விட்டுள்ளார்.