world

img

வியட்நாமில் சிபிஎம் தலைவர்கள்

ஹனோய், ஜுன் 12 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தலைமையில் தூதுக்குழு ஒன்று வியட்நாம் பயணம் மேற்கொண்டுள்ளது. இக்குழுவினர் வியட்நாம் தலைநகர் ஹனோயில் ஜுன் 9 அன்று வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்திற்கு சென்றனர். அங்கு அவர்களை வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் டிரவுங் தி மாய் வரவேற்றார். இரு கட்சித் தலைவர்களும் பல்வேறு விசயங்கள் குறித்து விவாதித்தனர். இக்குழுவில் சீத்தாராம் யெச்சூரியுடன் கட்சி யின் மத்தியக்குழு உறுப்பினர்கள் ஹீராலால் யாதவ் (உத்தரப்பிரதேசம்), தேப்லினா ஹேம்ப்ராம் (மேற்குவங்கம்), சி.எஸ்.சுஜாதா(கேரளா), ஜோகேந்திர சர்மா(தில்லி) ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவினர்  சோசலிச வியட்நாமின் பல்வேறு சாதனைகளையும் திட்டங்களையும் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர்.