world

img

காகிதம் மூலம் கொரோனா பரிசோதனை கண்டறியும் கருவி.... இந்திய வம்சாவளி விஞ்ஞானி கண்டுபிடிப்பு

வாஷிங்டன்:
காகிதத்தை அடிப்படையாக வைத்து 5 நிமிடத்தில் கொரோனாவைரஸ் தொற்றை கண்டறியும்புதுமையான கருவியை இந்தியவம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானிஒருவர் கண்டுபிடித்துள்ளார்.கொரோனா வைரஸ் தொற்றைவிரைவாகக் கண்டறியும் கருவியை உருவாக்கும் முயற்சியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவிஞ்ஞானி தீபாஞ்சன் பான்என்பவர் தலைமையில்  அமெரிக்காவின் இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் ஈடுபட்டனர். இதில்தீவிர முயற்சிக்குப் பின்னர்,காகிதத்தை அடிப்படையாகக்கொண்டு‘அல்ட்ராசென்சிடிவ் கோவிட் 19’ பரிசோதனை முறையை உருவாக்கியுள்ளனர்.இதுதொடர்பான ஆய்வுக் கட்டுரை ‘ஏசிஎஸ் நானோ’ இதழில் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றைகண்டறிய காகிதத்தில் ‘எலக்ட்ரோகெமிக்கல் சென்சார்’ பயன்படுத்தி உள்ளனர். கார்பன் அணுக்களை அடர்த்தியாகக் கொண்ட ஒரே ஒருலேயர் கொண்ட அல்ட்ராசென்சி டிவ் பயோசென்சார் மற்றும்வைரஸ் தொற்றை உணர்ந்தறியும் மின்சார கருவி என இரண்டும்இணைந்த இந்தக் கருவி 5 நிமிடத்தில் பரிசோதனை செய்து முடிவுகளைத் துல்லியமாகத் தெரிவிக்கிறது என்று கூறப்படுகிறது.கொரோனா வைரஸ் தொற்றுஇருப்பவர்கள், இல்லாதவர்கள் என இரு தரப்பினரிடம் இருந்தும்மாதிரிகளை எடுத்து இந்தக் கருவியில் பரிசோதனை செய்துள்ளனர்.அதில் துல்லியமாக முடிவுகள் கிடைத்துள்ள தாக கூறப்படுகிறது.இந்தக் கருவியை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். விலையும் குறைவு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

;