பியூனஸ் அயர்ஸ், ஜூலை 4- தற்போது எழுந்துள்ள நெருக்கடி நாகரீக உலகத்திற்கு எதிரான நெருக்கடி என்று போப் பிரான்சிஸ் கவலை தெரிவித்துள்ளார். தென் அமெரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், “ஐக்கிய நாடுகள் சபையே நெருக் கடியில் வீழ்ந்துள்ளது. இந்நிலையில் சான் மார்ட்டின் மற்றும் பொலிவார் ஆகி யோரின் கனவுகளை அடைய பிராந்தி யத்தின் ஒற்றுமையே இன்றையத் தேவையாகும். நெருக்கடியைத் தனி யாக நின்று சமாளித்து விடமுடியாது. பிறரின் கைகளைப் பிடித்துக் கொண்டு தான் மேலே வர முடியும். தென் அமெரிக்கா எப்போதும் பாதிக்கப்பட்ட பகுதியாகவே இருந்துள்ளது. ஏகாதி பத்தியங்களின் சுரண்டலில் இருந்து தப்பிக்க தன்னைத்தானே விடுவித்துக் கொள்ள வேண்டும்” என்று செய்தி யாளர்களுக்கு அளித்துள்ள பேட்டி யில் கூறியுள்ளார்.