லிமா, ஜன.20- தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெரு வின் தலைநகர் லிமாவை பல மாகாணங்களில் இருந்தும் வந்துள்ள ஆயிரக்கணக்கான மக்கள் முற்றுகையிட்டுள்ளனர். பெருவில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பெட்ரோ காஸ்டில்லோவை, நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பதவி நீக்கம் செய்தன. அதிலும் சட்டப்படியான நடைமுறைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. காஸ்டில்லோவுக்கு ஆதரவாக மக்கள் இருப்பதால், அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர். காஸ்டில்லோ விடுதலை மற்றும் நாடாளுமன்றத்திற்கு விரைவில் தேர்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பெரு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அடக்குமுறைக்கு இதுவரையில் 52 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
மக்கள் மத்தியில் கொந்தளிப்பு அதிகரித்துள்ளது. தலைநகர் லிமாவை கைப்பற்றுவோம் என்ற முழக்கத்து டன் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். சட்டவிரோதமான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதால், பெருந்திரள் போராட்டத்திற்கும், தலைநகர் முற்றுகைக்கும் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்தப் போராட்டத்திற்கு இடதுசாரி அமைப்பு கள் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக் கின்றன. ராய்ட்டர் ஊடக குழுமத்தின் செய்தியின்படி, “நாட்டின் பின்தங்கிய பகுதிகளில் இருந்து தான் பெரும்பாலும் இந்தப் போராட்டக்காரர் கள் வந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருவதைத் தடுக்க பாதுகாப்புப் படைகள் பெரும் முயற்சி செய்தும் தடுக்க முடியவில்லை. அவர்கள் தொடர்ந்து தலைநகருக்கும் நுழைந்து கொண்டி ருக்கிறார்கள்” என்று தெரிய வந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அடக்குமுறையை பெரு சந்தித்து வருகிறது. போராட்டங்களில் மக்கள் மத்தியில் நிலவும் கருத்துகளில், “காஸ்டில்லோவை வெளி யேற்றிய பிறகு பிரதமராக உள்ள போலு வார்ட்டே அதிகாரத்தில் இருந்த நாட்களின் எண்ணிக்கையை விட, கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது” என்பதும் ஒன்றாகும். இதனால்தான் நாடாளு மன்றம் இழுத்து மூடப்பட்டு, உடனடியாக நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் வலுத்து வருகிறது.
ஊழல் பேர்வழிகள்
தற்போதுள்ள நாடாளுமன்றத்தின் அணுகு முறை பற்றி லத்தீன் அமெரிக்க அரசியலை உன்னிப்பாகக் கவனித்து வரும் பிடியாஸ் ரோல்டான் கூறுகையில், “பெருவின் அரசியல் அமைப்புகள் ஊழல் பேர்வழிகளைக்கொண் டது. அதோடு, வர்க்க ரீதியாக பணக்காரர்களின் பக்கம் நிற்கக்கூடியவையாகும். 2023 ஆம் ஆண்டில் தேர்தல் நடப்பதை அவர்கள் விரும்ப வில்லை. அதற்குக் காரணம், சுரங்கங்களுக் கான உரிமங்கள் இந்த ஆண்டுதான் நிறைவு பெறு கின்றன. தேர்தல் நடைபெற்றால் அதிலிருந்து கிடைக்கக்கூடிய லஞ்சம் உள்ளிட்டவை நின்று போய்விடும்” என்கிறார். இதற்கிடையில், மக்கள் திரளைக் கண்ட ஆட்சியாளர்கள், ஆயிரக்கணக்கான பாது காப்புப் படையினரை நாட்டின் பிற பகுதி களில் இருந்து வரவழைத்து, தலைநகர் லிமாவில் நிறுத்தியிருக்கின்றனர். பெரும் எதிர்ப்பு கிளம்பி யுள்ள புனோ உள்ளிட்ட மாகாணங்களிலும் பாது காப்புப் படையினர் கடுமையான அடக்கு முறையை மேற்கொண்டு வருகிறார்கள். புனோவின் மகுசானி நகரில் குறிபார்த்து சுடும் துப்பாக்கி வீரர்களைக் கொண்டு மக்கள் மீது குண்டுகளை செலுத்தியிருக்கிறார்கள். அதில் 35 வயது பெண் ஒருவர் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்திருக்கிறார். “மகுசானி படுகொலை” என்று இதை மக்கள் அழைக்கிறார்கள். இதற்கு நீதி வேண்டும் என்ற குரலும் தலைநகர் முற்றுகை யின்போது உரக்கக் கேட்கிறது.