world

img

பெரிய நாடுகள் மந்த நிலைக்கும் தள்ளப்படும்

பாலி, நவ.17- பல்வேறு பெரிய பொருளாதார நாடு கள் மந்த நிலைக்குத் தள்ளப்படும் சூழல் உருவாகியுள்ளது என்று உலக வர்த்த கக் கழகத்தின்(உட்டோ) தலைமை இயக்குநர் கோசி ஓகோஞ்சோ எச்சரித்துள்ளார்.  இந்தோனேசியாவின் பாலி நகரில் ஜி20 நாடுகளின் கூட்டம் நடந்து வரு கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க வந்த  ஓகோஞ்சோ, “உக்ரைன் போர், அதி கரித்து வரும் உணவு மற்றும் எரிபொருள் விலைகள் மற்றும் ஒட்டுமொத்தமான விலைவாசி உயர்வு ஆகியவற்றால் பல  பெரிய பொருளாதாரங்கள் மந்த நிலை யில் விழப் போகின்றன. இது அனைத்து  நாடுகளிலும் நடக்காமல் போகலாம். ஆனால் பல நாடுகள் மந்தத்தை நோக்கிச் செல்கின்றன” என்று குறிப்பிட்டார்.  உலக வர்த்தகம் பற்றிக் கடந்த மாதத்தில் தனது கணிப்பை உட்டோ வெளியிட்டிருந்தது. அதில் 2023 ஆம் ஆண்டில் வெறும் 1 விழுக்காடுதான் வர்த்தகம் அதிகரிக்கும் என்றும், நடப்பாண்டிற்கான கணிப்பும் நிறை வேறாது என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.  இது பற்றிக் கருத்து தெரிவித்த ஓகோ ஞ்சோ, “ஏழை நாடுகளும், வளரும்  நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப் படும் என்பது உண்மைதான். இந்த  நாடுகள் வளர்ந்த நாடுகளின் உதவியை  நாடி நிற்கின்றன. அந்த நாடுகள் உத வினால்தான் மீள முடியும். நிலையற்ற தன்மைக்கான அம்சங்கள் நிறைய உள்ளன. அனைத்து சவால்களும் நம்மை கீழ்நோக்கி இழுக்கின்றன. உக்ரைன் போர் மற்றும் விலைவாசி உயர்வு ஆகிய இரண்டும் நிலையற்ற தன்மைக்கான காரணங்களாகும்” என்றார்.

உட்டோவின் நடைமுறையில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்துப் பேசிய அவர், “சச்சரவுகள் எழும்போது அவற்றைத் தீர்ப்பதற்காக உட்டோ  தற்போது வைத்திருக்கும் நடைமுறை களில் சீர்திருத்தம் செய்யத் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். அதில் உள்ள தடைகளை விரைவில் உடைப்போம்” என்று நம்பிக்கை தெரிவித்தார். 2019 ஆம் ஆண்டில் இருந்து இந்த சீர்திருத்தங்களுக்கான முயற்சிகள் முடங்கிப் போயுள்ளன. அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த டொனால்டு டிரம்ப், சச்சரவுகளை விசாரித்துத் தீர்ப்பளிக்கும் நீதிபதிகள் நியமனத்தைத் தடுத்து நிறுத்தினார்.

41 ஆண்டுகளாக இல்லாத நெருக்கடி

பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், பிரிட்டனில் கடந்த 41 ஆண்டு களாக இல்லாத நெருக்கடி உருவாகி யிருக்கிறது. எரிபொருள், உணவு மற்றும் போக்குவரத்திற்கான விலை கள் கடுமையாக உயர்ந்துள்ளன. அக்டோபர் 1981க்குப் பிறகு முதன்முறை யாக பிரிட்டனின் பணவீக்கம் 11.1 விழுக்காட்டைத் தொட்டிருக்கிறது. எரிவாயு விலை மற்றும் மின்சாரக் கட்டணங்கள் உயர்ந்ததே இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. பிரிட்டனின் தேசிய புள்ளியியல் அலு வலகம் இதை உறுதி செய்கிறது. அந்த  அலுவலகத்தின் தலைமைப் பொருளா தார வல்லுநரான கிரேண்ட் பிட்ஸ்னெர் கூறுகையில், “கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் எரிவாயு விலை 130 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. அதே போல் மின்சாரக் கட்டணம் 66 விழுக்காடு உயர்ந்துள்ளது. 1977 ஆம்  ஆண்டுக்குப் பிறகு உணவுப் பொருட் களின் விலைகள் பெரும் அளவில் அதி கரித்துள்ளன” என்கிறார். இந்த விலை  அதிகரிப்புகள் கடுமையான முடி வுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரிட்டனின் நிதி யமைச்சகம் கூறியுள்ளது. ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட பெரிய நாடு களும் நெருக்கடியைச் சந்தித்து வருகின் றன. உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு எதி ரான நிலையை எடுத்ததால், எண்ணெய் மற்றும் எரிவாயு கிடைக்காத நிலை உருவானது. இப்போதைக்கு உக்ரைன் நெருக்கடி தீரும் என்ற நிலை தென்படவில்லை. மாற்று ஏற்பாடுகள் செய்யப்படாவிட்டால், வரும் ஆண்டில்  பல பெரிய பொருளாதார நாடுகள் மந்த நிலைக்குத் தள்ளப்படும் என்று உட்டோ எச்சரித்துள்ளது. கிட்டத்தட்ட அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் விலை யுயர்வைத் தாங்கிக் கொள்ளும் வகை யில் தங்கள் ஊதியங்களை உயர்த்த வேண்டும் என்று தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள்.