world

img

50 ஆண்டுகளுக்குப் பிறகும் கொல்லும் அமெரிக்கக் குண்டுகள்

ஹோசிமின் சிட்டி, ஜூன் 26- வியட்நாமைச் சிதைக்க அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகளை அந்நாட்டு மக்கள் முறியடித்தும், போர்க்காலத்தில் புதைத்து வைக்கப்பட்ட அமெரிக்கக் குண்டுகள் இன்னும் மக்களின் உயிர்களைப் பறித்துக் கொண்டிருக்கின்றன. வியட்நாமில் புரட்சியை நோக்கி மக்கள் சென்று கொண்டிருந்ததால் அதைத் தகர்க்க அமெரிக்கா களத்தில் இறங்கியது. இரண்டு அணுகுமுறையைக் கையில் எடுத்தார்கள். வியட்நாமை இரண்டு பகுதி களாகப் பிரித்து, ஒன்றைத் தனது மேலாதிக்கத்தின் கீழ் வைத்துக் கொள்வது முதலாவதாகும். அடுத்தது, கம்யூனிஸ்டுகள் செல்வாக்குள்ள பகுதியை குண்டுகள் மூலம் நிர்மூலமாக்குவதாகும். இந்த இரண்டையும் கம்யூனிஸ்டுகள் தலைமையில் அந்நாட்டு மக்கள் முறியடித்தார்கள். ஆனால், நாட்டை நிர்மூலமாக்க அமெரிக்க ராணுவம் வீசிய குண்டுகள் இன்னும் பல உயிர்களைப் பறித்துக் கொண்டிருக்கின்றன.

வியட்நாமில் தனது சதிவேலைகள் எதுவும் பலிக்காததால் அந்நாட்டை விட்டு அமெரிக்கப் படைகள் வெளியேறி 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. அவர்கள் வீசிய குண்டு கள் இன்னும் வயல்வெளிகளிலும், பயன்பாட்டில் இல்லாத இடங்களிலும் கண்டெடுக்கப்படுகின்றன. 20 ஆண்டுகள் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 50 லட்சம்  குண்டுகளை வியட்நாம் மீது அமெரிக்கப் படைகள் வீசின. இவ்வாறு வீசப்பட்டவற்றில் மூன்றில் ஒரு பகுதி வெடிக்கவில்லை. இவ்வாறு வெடிக்காத குண்டுகளில் தொகுப்புக் குண்டுகளும் அடங்கும். தனது தோட்டத்தை கிளறிக் கொண்டி ருந்தபோது 62 வயதாகும் ஹோ சி பே என்ற விவசாயிக்கு ஏதோ தட்டுப்பட்டிருக்கிறது. எச்சரிக்கையுடன் அவர் அதைக் கவனமாகத் தோண்டி எடுத்தார். முழுமையாக எடுத்த பிறகுதான் அது வெடிக்காமல் இருந்த ஏவுகணை என்று அவருக்குத் தெரிந்தது. அதை எடுத்துப் பத்திரமாக வைத்துவிட்டு  காவல்துறையினருக்குத் தகவல் தெரி வித்திருக்கிறார். கடந்த 40 ஆண்டுகளில் இத்தகைய சம்பவங்கள் தனது தோட்டப் பகுதியில் தொடர்வதாக அவர் கூறுகிறார்.

ஹோ சி பே வசிக்கும் குவாங் டிரை மாகாணம்தான் வியட்நாமிலேயே பெரும் அளவில் மாசடைந்ததாகும். வடக்கு மற்றும்  தெற்கு வியட்நாம் பகுதியில் இது அமைந் திருக்கிறது. போர் நிறைவு பெற்றதில் இருந்து தற்போது வரையில் 3 ஆயிரம் பேர் அமெரிக்க ராணுவம் வீசி வெடிக்காமல் இருந்த குண்டுகள் வெடித்ததால் கொல்லப்பட்டிருக் கிறார்கள். 2022 ஆம் ஆண்டில் கூட குண்டு என்று தெரியாமல் ஒரு விவசாயி அதை அகற்ற முயன்றதால் திடீரென்று வெடித்து அவர் உயிரிழந்தார். இத்தகைய குண்டுகளை அகற்றப் பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டும் இன்னும் முழுமையாக இந்த நடவடிக்கைகள் வெற்றி பெறவில்லை. அமெரிக்கக் குண்டுகளால் பாழாய்ப் போன நிலங்களைச் சரிசெய்து மீண்டும் அவற்றை விவசாயப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் பணியில் வியட்நாம் அரசு  முனைப்புடன் இருக்கிறது. சில சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து குண்டுகளை அகற்றும் பணிகள் இன்றும் தொடர்கின்றன. 2022 ஆம் ஆண்டில் மட்டும் 14 ஆயிரத்து 615 குண்டுகளைக் கண்டுபிடித்து அழித்திருக்கிறார்கள். பல சதுர கி.மீ. நிலங்கள் குண்டுகள் இல்லாத இடங்களாக மாற்றப்பட்டுள்ளன.

பொம்மை அல்ல

சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும்போது, திடீரென்று ஒரு பொருள் அவர்கள் கால்களில் தட்டியிருக்கிறது. என்னவென்று தெரியாமல் அதை வைத்து வீசி எறிந்து விளையாடியிருக்கிறார்கள். சில பெரியவர்கள் வந்து அது குண்டு என்று சொல்லி அவர்களிடமிருந்து வாங்கிச் சென்றிருக்கிறார்கள். நிலத்தடியில் ஒரு அங்குலம் ஆழத்தில் கூட பல முறை குண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறுவர்களிடம் இது பொம்மை இல்லை என்று சொல்லி அவர்களை சமாளிப்பதற்குள் பெரியவர்கள் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.