world

img

பாகிஸ்தான் : இம்ரான் கைதுக்கு கடும் எதிர்ப்பு வன்முறைக்கு 6 பேர் பலி

இஸ்லாமாபாத், மே 10- ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்துள்ளதால் பாகிஸ்தானில் நாடு தழுவிய போராட்டங்களும், அதன் எதிரொலியாக வன்முறையும் வெடித்துள்ளன. பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு இம்ரான்கானைக் கைது செய்து சிறையில் அடைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன. அடுத்த தேர்தல் வரையில்  அவரை முடக்குவதன் மூலம் அவரது கட்சியின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்கும் முயற்சியில் அரசு முயற்சிக்கிறது. இந்நிலையில் ஒரு வழக்கிற்காக நீதிமன்றத்திற்கு வந்த அவரை வேறொரு வழக்கில் கைது செய்திருக்கிறார்கள். அவரை எத்தனை நாட்கள் தங்கள் வசம் வைத் திருப்பார்கள் என்ற விபரங்கள் இதுவரையில் வெளியாகவில்லை. இம்ரான் கானும், அவரது துணைவியார் புஷ்ரா பீபி ஆகியோர் இணைந்து அல் காதிர் என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார்கள். இந்த  அறக்கட்டளை மூலமாக அல் காதிர் பல்கலைக் கழகம் அமைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறப்பட்டு அதில் இம்ரான் கானுக்கு தொடர்பிருப்பதாகக் குற்றம்  சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் பல்வேறு முறை விசாரணைக்கு அழைத்தும் அவரும், அவருடைய துணைவியாரும் வரவில்லை என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஊழல் விவகாரத்தில் முக்கியமான குற்றவாளியாக ஷெசாத் அக்பர் கருதப்படு கிறார். அவர் இம்ரான் கானின் முன்னாள் ஆலோ சகர் ஆவார். அவரைக் கைது செய்வதற்காக இண்டர்போல் வழியாக சிவப்பு பிடியாணையை வெளியிட்டுள்ளார்கள்.  ஆனால் அவரைக் கடத்திச் செல்வதைப் போன்று அழைத்துச் சென் றார்கள் என்று அவரது கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கட்சியின் துணைத்தலைவரான ஃபவத் சவுத்ரி, “இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து இம்ரான்கான் கைது செய்யப்பட்டார். இப்போது வரையில் அவரது  வழக்கறிஞர்களோ அல்லது கட்சித் தலை வர்களோ அவரைப் பார்க்க அனுமதிக்கப்பட வில்லை” என்றார். முழு அடைப்பு இம்ரான் கான் கைதைக் கண்டித்து நாடு தழுவிய முழு அடைப்பைக் கடைப்பிடிக்கு மாறு அவரது கட்சி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அரசின் நடவடிக்கைகளுக்கு எதி ராகத் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்யுங்கள் என்றும், தவறான குற்றச்சாட்டுகளைக் கூறி  முன்னாள் பிரதமரை முடக்க விரும்புவதற்கு எதி ராகக் குரல் கொடுங்கள் என்று கட்சித் தலை வர்கள் மக்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறா ர்கள். ஏற்கனவே வீதிகளில் இறங்கி கட்சி ஊழி யர்கள் மற்றும் ஆதரவாளர்கள் போராடிக் கொண்டுள்ளனர்.

வன்முறை

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மட்டும்  இதுவரையில் 25 காவல்துறை வாகனங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன. இம்ரான்கானின் ஆதரவாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 14க்கும் மேற் பட்ட அரசுக்குச் சொந்தமான கட்டிடங்கள் சேத மடைந்துள்ளன. பொருட்கள் கொள்ளை யடிக்கப்பட்டிருக்கின்றன. தகவல் தொடர்பைத் துண்டிப்பதன் மூலம் மக்கள் கூடுவதைத் தடுக்க முடியும் என்று காவல்துறை நம்புகிறது. முடக்கம் பாகிஸ்தான் முழுவதும் சமூக வலைத் தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. முக்கியமான தளங்களைப் பார்க்க முடியாமல் அந்நாட்டு மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். சமூக  வலைத்தளங்கள் முடக்கப்பட்டதை அந்நாட்டின் தொலைத்தொடர்பு நிர்வாகம் உறுதிப்படுத்தி யிருக்கிறது. அதோடு, காலவரையின்றி தொடர்புகள் துண்டிக்கப்படுவதாகவும் கூறியிருக்கிறார்கள்.

நீதிமன்றமாக மாறிய விருந்தினர் மாளிகை

நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தால் சட்ட ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும் என்று கூறி, இம்ரான் கான் தங்க வைக்கப்பட்டிருந்த விருந்தினர் மாளிகையையே தற்காலிக நீதிமன்றமாக மாற்றி விட்டனர். 14 நாட்களுக்கு அவரைத் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தேவை என்று விசாரணைப் பிரிவினர் கோரிக்கை வைத்தார்கள்.