world

img

சோமாலியாவில் வறட்சி காரணமாக 43 லட்சம் மக்கள் இடம் பெயர்வு

மொகடிசு: உலகின் அதீத  வறுமை மற்றும்  ஏழ்மை நிலைக்கு கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியா தள்ளப்பட்டுள்ளது. அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 25 சத வீதத்திற்கும் அதிகமான நபர்கள் தற் போதைய வறட்சி மற்றும் போர் காரண மாக மீண்டும் உள்நாட்டு அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். 1.7 கோடி மக்கள் தொகை கொண்ட சோமாலியாவில் தற்போது மீண்டும் உள்நாட்டு அகதிகளாக  43 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என்ற சமீபத்திய அறிக்கை அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. சோமாலியாவில் மட்டும் 82.5 லட்சம் மக்கள் உணவை எதிர்பார்த்து வாழும் சூழலுக்கு தள்ளப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டே, 40 ஆண்டுகள் இல்லாத அளவிலான வறட்சியை அந்நாடு எட்டி இருந்தது என  ஐ.நா சபை கூறியுள்ளது.

இக்கொடூர வறட்சியிலும். போரிலும் கால்நடை கள் மற்றும் குழந்தைகள், பெண்கள் என அந்நாட்டு மக்கள் அதிகளவு பலியாகியுள்ளனர். பண வீக்கமும் மிக உச்சத்தில் உள்ளது. உக்ரைன்-ரஷ்யா போரைக் கார ணம் காட்டி பல நாடுகள் சோமாலியா விற்கு வழங்கி வந்த உதவிகளை வெட்டி விட்டன. போதுமான உதவிகள் இல்லாததால் மக்கள் உணவிற்காக சில வாரங்கள் கூட காத்திருக்கும் சூழல் நீடிக்கிறது. ஐ.நா உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) வெளியிட்ட அறிக் கையில் எல் நினோ விளைவினால்  உருவாகும் வறட்சி மற்றும் திடீர் இயற்கை மாற்றத்தால் உருவாகும் அதீத மழை காரணமாக அக்டோபர் மாதம் 37 லட்சம் ஏக்கர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கும்; இதனால் மட்டும் ஆற்றுப்படுகையில் வாழும் 12 லட்சம் மக்கள் பெரும் பாதிப்பை  சந்திப்பார்கள் என எச்சரிக்கப் பட்டுள்ளது. எல் நினோ என்பது கடல் மேற்பரப் பின் வெப்பமயமாதல் அல்லது மத்திய மற்றும் கிழக்கு வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் சராசரிக்கும் அதிகமான கடல் மேற்பரப்பு வெப்ப நிலையைக் குறிக்கும். இந்நிலையில்  மக்களை  பாது காப்பதற்கான தீவிர  நடவடிக்கை எடுக்க ஐ.நா.வின்  உணவு மற்றும் விவ சாய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.