world

img

அமெரிக்கா: 19 குழந்தைகள் உட்பட 21 பேர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் ஆரம்ப பள்ளியில் இளைஞன் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 குழந்தைகள் உள்ளிட்ட 21 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உவால்டே என்னும் நகரில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றில் செவ்வாய் அன்று பதினெட்டு வயதுடைய இளைஞன் ஒருவன் 19 பள்ளிக் குழந்தைகளையும், வயது வந்த இருவரையும் சுட்டுக் கொன்றுள்ளான். இவ்வாறு சுட்டுக்கொன்ற இளைஞன் தப்பி ஓட முயற்சிக்கும்போது தன் பாட்டியையும் சுட்டுக்கொன்றுள்ளான். பின்னர் அவன் தப்பிப்பதற்காகத் தன் கார் அருகே விரைந்தபோது, அவனைக் காவல்துறையினர் சுட்டுக்கொன்றுவிட்டனர். இந்நிலையில் துப்பாக்கி சூட்டிற்கான காரணம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. 

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

;