உக்ரைன் தலைநகர் கீவ்வில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கிய ரஷ்யா – உக்ரைன் போர் இன்று 20ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. இதனால் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறி வெளி நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். மேலும் பலர் பதுங்கு குழிகளிலும் தங்கி வருகின்றனர். இதற்கிடையில் உக்ரைனின் தலைநகர் கீவ் நோக்கி ரஷிய படைகள் முன்னேறி வருகின்றன.
இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு முதல் அடுத்த 36 மணி நேரத்திற்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக நகர மேயர் தெரிவித்துள்ளார். \
ரஷிய படைகள் கீவ் நகர் நோக்கி நெருங்கி வரும் சூழ்நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படியும், பதுங்கு குழிகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.