world

img

பொருளாதார நெருக்கடி: இலங்கையில் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம்

இலங்கை ஜனாதிபதியை பதவி விலகக்கோரி நாடு முழுவதும் உள்ள வணிகர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் உள்ள வணிக சங்கங்கள் இன்று கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

மேலும், ரயில்வே, போக்குவரத்துத் துறை, வங்கிகள், சுகாதாரத்துறை, மின்சாரத்துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரியும் பணியாளர்களும் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.