காசா மீது இஸ்ரேல் கொடூரமான தாக்குதலை நடத்தி வரும் நிலையில், காசாவில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் எதிரிகள்தான். காசாவில் ஒரு குழந்தைகூட இருக்கக்கூடாது என இஸ்ரேல் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் மோஷேபெயிக்லின் பேசியிருப்பது உலக நாடுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
காசா மீதான தாக்குதலை எதிர்த்து, இஸ்ரேலின் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி, ஒரு விவேகமான நாடு, எப்போதும் பொதுமக்களுக்கு எதிராக போரிடாது. பொழுதுபோக்குக்காக குழந்தைகளையும் கொல்லாது. பெருமளவிலான மக்களை இடம்பெயரச் செய்யாது.
இவ்வாறான, ஒரு நாட்டை ஆளும் திறனற்ற மற்றும் பழிவாங்கள் குணமானது, நமது வாழ்வாதாரத்தையே ஆபத்தில் ஆழ்த்தி விடும் என்று இஸ்ரேல் அரசை விமர்சித்தது.
இதனையடுத்து, அந்நாட்டு நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் மோஷேபெயிக்லின் தெரிவித்ததாவது, காசாவில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் எதிர்தான். காசாவில் ஒரு குழந்தைகூட இருக்கக்கூடாது.
நாங்கள் காசாவை ஆக்கிரமித்து, அங்கு குடியேற வேண்டும். இதனைத் தவிர வெற்றி என்று வேறெதுவும் இல்லை என்று கூறினார்.
மோஷேவின் இந்தக் கருத்தானது. பல்வேறு தரப்பினரிடையே பெரும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது.
காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது. தாக்குதலை நிறுத்துமாறு, உலக நாடுகள் பலவும் கோரிக்கை விடுத்தாலும், அதனை இஸ்ரேல் கண்டுகொள்ளவில்லை.
காசாவில் 14,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்களை இஸ்ரேல் தடை செய்துள்ளதால் குழந்தைகள் இறக்கும் நிலைக்கு செல்கின்றனர். ஆனால் இரக்கமில்லாத இஸ்ரேல் அரசு தொடர்ந்து தாக்குதலை நடத்தி காசாவை ஆக்கிரமித்து வருகிறது.