காசா பள்ளி மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில், குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய காசாவின் நஸ்ரேத்தில் உள்ள பள்ளியின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 9 குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாக்குதலில் படுகாயமடைந்த 34 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வடக்கு காசாவில் பல வாரங்களாக இஸ்ரேல் ராணுவ நடத்தி வரும் தாக்குதலில் 770க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக காசா சிவில் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.