world

img

வடக்கு காசாவில் அனைத்து அரசு மருத்துவமனைகளும் மூடல்

காசாவின் வடக்கு பகுதியில் செயல்பட்டு வந்த கடைசி மருத்துவமனையும் இஸ்ரேல் ராணுவ கட்டுபாட்டுக்குள் வந்துள்ளதால், மருத்துவ சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படுவதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல், தொடர்ந்து பாலஸ்தீனத்தின் காசா மீது தாக்குதல் நடத்தி பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து வருகிறது.

இஸ்ரேல் காசா மீது நடத்திவரும் தொடர் தாக்குதலால் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. தற்போதுவரை 53 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இஸ்ரேல், காசா மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதன் வெளிப்பாடாய், வடக்கு காசாவில் செயல்பட்டு வந்த கடைசி மருத்துவமனையான இந்தோனேஷியன் மருத்துவமனையையும் இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

காசாவின் வடக்கு பகுதியில் இருந்த பிற மருத்துவமனைகளில், தொடர் தாக்குதல்களால் மருத்துவ சேவைகள் நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில், மேற்கண்ட இந்த மருத்துவமனையில் மட்டுமே காயமடைந்தோருக்கு மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

இப்போது அந்த மருத்துவமனையும் இஸ்ரேல் ராணுவத்தால் முடக்கப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.