பாகிஸ்தான்,நவம்பர்.09- பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் நடந்த திடீர் குண்டுவெடிப்பில் 24 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் தென்மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா ரயில் நிலைத்தில் இன்று காலை திடீரென பயங்கர குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர் 46 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ள நிலையில் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து அந்நாட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்