world

img

நேபாளத்தில் கனமழை: பலி எண்ணிக்கை உயரும் அச்சம்!

நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் 90-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் கடந்த மூன்று நாள்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் தலைநகரில் ஒருசில பகுதிகளில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், 200-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியது. வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் குடியிருப்பாளர்கள் மேல் தளங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

வெள்ளத்தில் சிக்கி இதுவரை கிட்டதட்ட 90-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். வெள்ளத்தில் இருந்து சுமார் 1000 பேர் மீட்கப்பட்ட நிலையில், அவர்களில் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதால், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.