world

img

ஐரோப்பிய மத்திய வங்கியின் வட்டி விகிதம் அதிகரிப்பு

19 ஐரோப்பிய நாடுகளை உறுப்பு நாடுகளாகக் கொண்ட ஐரோப்பிய மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை 2011 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக உயர்த்தியுள்ளது.

ஜூன் மாதத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அளித்த உறுதிமொழியை நிறைவேற்றுவதாக வங்கி அறிவித்திருக்கிறது. 50 புள்ளிகள் அதிகரிப்பை வெளியிட்ட மத்திய வங்கி, பணவீக்க எகிறுவதைக் குறைக்கும். தனது நிதிக்கொள்கையை சரிசெய்து கொள்ள இந்த வட்டி விகித அறிவிப்பு உதவும்  என்று கூறியுள்ளது. அத்தகைய வாய்ப்புகள் இருப்பினும், கடன்களை வாங்கியுள்ள நாடுகள் பெரும் பாதிப்பை சந்திக்கவுள்ளன.

பத்திரங்களை வாங்கும் திட்டங்கள் அனைத்தும் ஜூலை 1 ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது. வட்டி விகிதம் தளர்த்தப்பட்டுள்ளதால், சில ஐரோப்பிய நாடுகள் வெளியிட்டுள்ள பத்திரங்களின் மதிப்பிற்கும், ஜெர்மனி வெளியிட்டுள்ள பத்திரங்களின் மதிப்பிற்கும் இடையிலான வேறுபாடு அதிகரிக்கப் போகிறது. மிகவும் எச்சரிக்கையுடன் பல்வேறு ஐரோப்பிய மண்டலத்தில் இடம் பெற்றுள்ள நாடுகள் பயணிக்க வேண்டிய அவசியம் இருககிறது.

அதிகாரபூர்வமாக ஐரோப்பிய மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இதுவரையில் நெளிவு சுழிவான அணுகுமுறையைக் கையாண்டோம். இனிமேல் மிகக்குறைவான வட்டி விகிதம் மற்றும் பத்திரங்களை வாங்கிக் குவிக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது" என்று கூறியுள்ளது.