பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களில் இயங்கும் புதிய உள்ளெரி(இன்டர்னல் கம்பஷன்) என்ஜின் கார்களின் விற்பனைக்கு வரும் 2035-ஆம் ஆண்டு முதல் தடை விதிக்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக 55 இலக்குக்கான திட்டம் என்ற தலைப்பில் ஓர் உடன்படிக்கையை உறுப்பு நாடுகள் வியாழக்கிழமை மேற்கொண்டன.
புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றத்துக்குக் காரணமான பசுமைக் குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் 55 சதவிகிதம் குறைக்க ஐரோப்பிய யூனியன் இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த இலக்கை அடைவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த உள்ளெரி என்ஜின் கார் தடை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.