world

img

பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் மிரட்டல்

நியூயார்க்,டிச.1- 
பிரிக்ஸ் பிளஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகள் அமெரிக்க டாலருக்கு மாற்றாக புதிய பிரிக்ஸ் நாணயத்தை கொண்டு வந்தாலோ அல்லது வேறு நாடுகளின் நாணயத்தை பயன்படுத்த முயன்றாலோ அந்நாடுகளின் பொருட்கள் மீது 100 சதவீதம் வரை வரி விதிப்பேன் என டொனால்ட் டிரம்ப்  மிரட்டல் விடுத்துள்ளார்.

பிரிக்ஸ் பிளஸ் பொருளாதார கூட்டமைப்பில் ரஷ்யா, சீனா, இந்தியா, பிரேசில், தென்னாபிரிக்க, சவூதி அரேபியா, அரபு அமீரகம், எத்தி யோப்பியா, ஈரான், எகிப்து ஆகிய நாடுகள் உறுப்பின ராக உள்ளன. இந்நாடுகள் சர்வ்தேச வர்த்தகத்தில் அமெரிக்க டால ருக்கு மாற்றான நாணயத்தை பயன் படுத்தும் திட்டத்தை ஒவ்வொரு  ஆண்டும் நடைபெறும் உச்சிமாநாட்டில் வலுப் படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வாகி யுள்ள டிரம்ப் தற்போது பிரிக்ஸ் நாடுகளுக்கு நேரடியாக மிரட்டல் விடுத்துள்ளார். ஞாயிறன்று அவர்  எக்ஸ் பக்கத்தில் இந்த மிரட்டலை வெளிப்படுத்தியுள்ளார். “பிரிக்ஸ் நாண யத்தை உருவாக்க மாட்டோம்.  அமெரிக்க டாலருக்கு மாற்றாக வேறு நாணயத்தை பயன்படுத்தமாட்டோம் என பிரிக்ஸ் நாடுகள் உத்தர வாதம் கொடுக்க வேண்டும்.

இல்லை யென்றால் அவர்கள் அமெரிக்காவு டன் மேற்கொள்ளும் வணிகத்திற்கு டாடா காட்டிவிடலாம். வேறு நாட்டு டன் வணிகம் வைத்துக்கொள்ளலாம். அந்நாடுகளின் பொருட்கள் மீது அமெரிக்கா 100 சதவீதம் வரை வரி விதிக்கப்படும்” என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.