world

img

அவுரங்கசீப்பின் கல்லறையைப் பாதுகாக்கக் கோரி ஐ.நா அவைக்கு கடிதம்

அவுரங்கசீப்பின் கல்லறையைப் பாதுகாக்கக் கோரி ஐ.நா அவைக்கு கடிதம்

அவுரங்கசீப்பின் கல்லறையைப் பாதுகாக்கக் கோரி ஐ.நா அவைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் சத்ரபதி சம்பாஜி மாவட்டத்தின் குல்தாபாத்தில் அமைந்துள்ள அவுரங்கசீப்பின் கல்லறையை அகற்றக்கோரி இந்துத்துவா அமைப்புகள் பேரணி நடத்தி வன்முறையை உருவாகினர். இதனைத் தொடர்ந்து பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.  இந்நிலையில் வன்முறை நடந்து ஒரு மாதம் கழித்து கடைசி முகலாய பேரரசரான பகதூர் ஷா ஜாபரின் வாரிசு எனத் தன்னை கூறிக்கொள்ளும் யாகூப் ஹபீபுத்தீன் டூசி அவுரங்கசீப்பின் கல்ல றையைப் பாதுகாக்கக் கோரி  ஐ.நா அவையின் பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் க்கு  கடிதம் எழுதியுள்ளார். யாகூப் ஹபீபுத்தீன் டூசி அவுரங்கசீப்பின் கல்லறை அமைந்துள்ள வக்பு சொத்தின் பராமரிப்பாளராக அறியப்படுகிறார்.  அக்கடிதத்தில் “இந்தக் கல்லறை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சின்னமாக அறி விக்கப்பட்டுள்ளது. மேலும் இது பண்டைய நினை வுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் மற்றும் எச்சங்கள் சட்டம் 1958 -ன் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இந்தச் சட்டத்தின்படி பாதுகாக்கப்பட்ட இந்த நினைவுச்சின்னத்தின் அருகில் அங்கீ கரிக்கப்படாத கட்டடங்கள் அல்லது மாற்றம் செய்வது அல்லது அக்கட்டடத்தை அழிப்பது அங்கு தோண்டுவது போன்ற செயல்களை மேற்கொள்ள முடியாது. அப்படி ஏதாவது அங்கு நடந்தால் அது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும். தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்களுக்காக இந்தப் பாரம்பரியச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். அத்தகைய நினைவுச் சின்னங்களை அழிப்பதோ,  சேதப்படுத்துவதோ, சட்டவிரோதமாக மாற்றியமைப்பதோ சர்வதேச கடமைகளை மீறும் செயலாகும். கடந்த 1972-ஆம் ஆண்டு நடந்த உலகக் கலாச்சாரம் மற்றும் இயற்கை பாரம்பரியத்தை பாதுகாப்பது தொடர்பான யுனஸ்கோ மாநாட்டில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. இந்த விஷயங்களைக் கவனத்தில் கொண்டு, அவுரங்கசீப்பின் கல்லறைக்கு தேசிய மற்றும் சர்வதேச சட்டங்களின்படி பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஒன்றிய அரசு மற்றும் இந்திய தொல்பொருள் துறைக்கு உத்தரவிட வேண்டும் என யாகூப் குறிப்பிட்டுள்ளார்.