வங்கதேசத்தில் பேருந்து ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வங்கதேசத்தில் சிட்டகாங் மாவட்டத்தில் உள்ள ஆளில்லா லெவல் கிராசிங்கில் மிர்ஷாராய் உபாசிலா பகுதியில் வெள்ளிக்கிழமையன்று, மாணவர்கள் மற்றும் பயிற்சி மையத்தின் ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற மினி பேருந்து டாக்கா நோக்கிச் செல்லும் ப்ரோவதி விரைவு ரயிலில் மோதியுள்ளது. ரயில் மினிபேருந்து மீது மோதியதில், ரயில் பாதையில் பல நூறு மீட்டர் கீழே இழுத்துச் சென்றது.
அந்த விபத்தில் ஒரே வயதுடைய 7 மாணவர்களும் 4 ஆசிரியர்களும் உயிரிழந்துள்ளதாக மிர்ஷாராய் காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி கபீர் ஹொசைன் தெரிவித்தார்.
மேலும், காயங்களுடன் மீட்கப்பட்ட 5 பேர் சிட்டகாங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.