- உக்ரைன் போரில் ரஷ்யாவை வெற்றி பெற அனுமதிக்கப்போவது இல்லை என ஜி 7 நாடுகள் முடிவு செய்துள்ளன.
- ரஷ்ய எண்ணெய் கப்பல்களை தடை செய்வது இல்லை என ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. அமெரிக்க மக்களிடையே தமது நிதி ஆதாரங்கள் குறித்து கவலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன என ஆய்வு தெரிவிக்கிறது.
- குழந்தைகளுக்கான பால் பவுடருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்க நிர்வாகமோ இதற்கு புடின்தான் காரணம் என கூறுகிறது.
- பாம்புத் தீவு எனப்படும் ஒரு முக்கியமான தீவை ரஷ்யப் படையிடமிருந்து மீட்க அமெரிக்க ராணுவ அதிகாரிகளின் உதவியுடன் உக்ரைன் படை முயற்சித்தது. ஆனால் அது தோல்வி அடைந்தது மட்டுமல்ல;
- ஏராளமான வீரர்களையும் கப்பல் மற்றும் விமானங்களையும் உக்ரைன் இழந்தது. உள்ளூரில் நிலவும் கோவிட் பெருந்தொற்றை சமாளிப்பதைவிட அதிக முன்னுரிமையும் நிதியையும் உக்ரைன் போருக்கு அமெரிக்க நாடாளுமன்றம் முக்கியத்துவம் அளித்துள்ளது. போலந்தில் இரண்டாம் உலகப்போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்த ரஷ்ய தூதர் உக்ரைன் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டார். இதனை போலந்து அரசாங்கம் நியாயப்படுத்தி உள்ளது.
- உக்ரைனுக்கு உதவி செய்திட கடன் வாங்குவது என ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. ரஷ்ய எண்ணெய்யை வாங்குவதை நிறுத்துவதற்கு நீண்ட நாட்கள் பிடிக்கும் என ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார்.
- உக்ரைன் போருக்கு பின்னர் ரஷ்ய- சீன வர்த்தகம் 25சதவீதம் உயர்ந்துள்ளது. ரஷ்யாவை தோற்கடிப்பது உக்ரைனுக்கு சாத்தியமே என பிரிட்டன் ராணுவ அமைச்சர் பென் வாலஸ் கூறியுள்ளார். ஆனால் ஜெலன்ஸ்கியின் உதவியாளர் அலெக்ஸி அரேஸ்டொவிச் போர் முனைகளில் உள்ள சூழலை உக்ரைனுக்கு சாதகமாக மாற்றுவது இயலாத ஒன்றாக மாறிவருகிறது என கூறியுள்ளார்.