world

உக்ரைன்-ரஷ்யா போர் கள நிலவரம்

ரஷ்ய மொழி பேசும் கிழக்கு உக்ரைன் டோன்பாஸ் பகுதியில் கடந்த 8 ஆண்டுகளில் நடந்த குற்றங்க ளை விசாரணை செய்ய வேண்டும் என இத்தாலியில் கையெழுத்து இயக்கம் நடக்கிறது.

ரஷ்ய தடைகள் காரணமாக அமெரிக்காவில் வரலாறு காணாத விலைவாசி உயர்வுக்கு டிரம்ப் ஆதரவாளர் கள் நடத்திய கலகம்தான் காரணம் என ஒபாமா ஆலோசகராக இருந்த லேரி சம்மர்ஸ் எனும் பொருளா தார ஆய்வாளர் கூறியுள்ளார். பைடன் புடினை குற்றம் சாட்டுகிறார்.

இவர் டிரம்பை குறை சொல்கிறார். ஆக மொத்தம் அமெரிக்க தலைவர்கள் மக்களை பொய் கள் மூலம் குழப்புகின்றனர்.  சுவீடன் இல்லாமல் தாங்கள் மட்டும் தனியாக நேட்டோவில் சேர மாட்டோம் என பின்லாந்து ஜனா திபதி சவுலி நிலின்ஸ்டோ கூறியுள்ளார். நேட்டோ வில் உள் முரண்பாடுகள் அதிகரிக்கின்றனவா?

உக்ரைனுக்கு அணு ஆயுதங்களை தருவதற்கு ஐரோப்பாவுக்கு முழு உரிமை உண்டு என போலந்து ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் சிகோர்ஸ்கி அதிரடி காட்டியுள்ளார்.

அப்படி ஒன்று நடந்தால் போலந்து உட்பட ஐரோப்பா முழுவதும் காணாமல் போய்விடும் எனவும் இதனை கூறிய நபர் மனநல மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்வது  நல்லது எனவும் ரஷ்யா பதிலடி தந்துள்ளது.

தான் உருவாக்கிய பயங்கர துரோன் எம்.கியூ.1சி. எனும் தாக்குதல் கருவிகளை பரிசோதித்து பார்க்கும் களமாக உக்ரைன் போரை அமெரிக்கா பயன்படுத்த முனைகிறது என ஸ்காட் ரிட்டர் எனும் ராணுவ ஆய் வாளர் குற்றம்சாட்டியுள்ளார்.

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையில் எவ்வளவு பிரதே சத்தை விட்டுத் தருவது என்பதை உக்ரைன்தான் முடிவு செய்ய வேண்டும் என நேட்டோவின் முதன்மை அதிகாரி ஸ்டோல்டன்பர்க் கூறியுள்ளார்.

தாங்கள் முட்டுக்கொடுத்த உக்ரைன் தோற்கிறது என மேற்கத்திய நாடுகள் உணர தலைப்பட்டுள்ளனரா?

ரஷ்ய தடைகள் காரணமாக விளைந்த விலைவாசி உயர்வு அமெரிக்க விவசாயிகளை கடுமையாக பாதித்துள்ளது. தடைகளுக்கு மத்தியில் ரஷ்யாவில் செயல்படும் அந்நிய நிறுவனங்களையும் போருக்கு பின்னர் செயல்பட முன்வரும் அந்நிய நிறுவனங்களையும் பாதுகாப்போம் என ரஷ்ய அரசாங்கம் கூறியுள்ளது.