world

img

கூடங்குளம் அணுமின் நிலைய 5ஆவது அணு உலைக்கான முக்கிய உபகரணங்களை ரோசாட்டம் நிறுவனம் அனுப்பியது

மாஸ்கோ, ஏப்.26- ஏஇஎம் டெக்னாலஜிஸின் உற்பத்தி பிரிவான ஆட்டம்மாஷ், ஜேஎஸ்சி (ரோசாட் டாமின் இயந்திர கட்டுமான பிரிவின் ஒரு பகுதி – ஆட்டம்எனர்கோமாஷ்), ஏப்ரல் 21 அன்று, இந்தியாவில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அமைக்கப்படும் 5வது அணு உலைக்கான ஓர் அணு உலை அழுத்த கலன் மற்றும் நான்கு நீராவி ஜெனரேட்டர்களை அனுப்பி வைத்துள்ளது. இந்த உபகரணங்கள் சாலை மற்றும் கடல் மார்க்கமாக ஒருங்கிணைந்த போக்கு வரத்து வழித்தடங்களில் அனுப்பப் பட்டுள்ளன. முதலில், சாலை மார்க்கமாக இந்த உபகரணங்கள் கொண்டு வரப்பட்டு பிறகு பார்ஜ் சரக்கு கப்பலில் ஏற்றப்படும். இந்த சரக்கு கப்பல் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் துறைமுகத்திற்கு சென்று அங்கிருந்து கப்பல் மூலம் கடல் மார்க்கமாக இந்தியா வுக்கு கொண்டு செல்லப்படும். கூடங்குளம் என்பிபி என்பது தமிழ்நாடு மாநிலத்தில் அமைக்கப்பட்ட, வி.வி.இ.ஆர் -1000 அணு உலைகளைக் கொண்ட அணுமின் நிலையமாகும். கூடங்குளத்தில் மொத்தம் 6000 மெகாவாட் திறன் கொண்ட விவிஇஆர்-1000 அணு உலைகளுடன் கூடிய 6 அணு உலைகள் அமைக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக, 2013 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் முறையே 1 மற்றும் 2வது அணு உலைகள்  அமைக்கப்பட்டு, இந்தியாவின் தேசிய மின் கட்டமைப்போடு இணைக்கப்பட்டுள்ளன. தற்போது கூடங்குளம் என்.பி.பி.யில் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட மாக மேலும் நான்கு அணு உலைகளை ரோசாட்டம் கட்டி வருகிறது.