பிரேசிலில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத வகையில் லூலா தலைமை யிலான இடதுசாரி அரசு அமேசான் காடுகள் அழிக்கப்படுவதை குறைத்துள்ள தாக பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ள னர்.
ஜூலை மாதம் வரையிலான 12 மாதங்களில், 9,001 சதுர கிலோமீட்டர் (3,475.31 சதுர மைல்) அமேசான் காடு அழிக்கப்பட்டுள்ளது என்றும் 2018 ஆம் ஆண்டிலிருந்து ஒப்பிட்டு பார்த்தால் இது மிகவும் குறைவு என்றும் 2022 ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 22.3% குறைந்துள்ளது என்றும் பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
“இது ஒரு முக்கியமான முன்னேற்றம் என்றும் மற்றும் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் பணியில் பிரேசில் அரசு தீவிரமாக செயல்படுவதை இது காட்டுகிறது என்றும்” காலநிலை கண்காணிப்பகத்தின் வழக்கறிஞர் குழு தலைவர் மார்சியோ அஸ்ட்ரினி தெரிவித்துள்ளார்.
இடதுசாரி ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா அமேசான் காடுகள் அழிக்கப்படும் அளவைக் கட்டுப்படுத்த உறுதியளித்ததை தொடர்ந்து இந்த முன்னேற்றம் வந்துள்ளதையும் இந்த அறிவிப்பு காட்டுகிறது என அவர் தெரிவித்தார்.லூலாவின் அரசாங்கம் காடுகள் அழிக்கப்படுவதை 2030க்குள் முற்றிலும் ஒழிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது.
அமேசான் காடுகளின் அழிவுக்கு காரணமாக உள்ள போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல், நில அபகரிப்பு மற்றும் சட்டவிரோத சுரங்கம் மற்றும் மீன்பிடித்தல் ஆகியவற்றின் ஆதிக்கத்தால் இது ஒரு தொடர் போராக உள்ளது என்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் மரினா சில்வா தெரிவித்துள்ளார்.எவ்வாறா யினும் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த உலக நாடுகள் இன்னும் பல பணிகளை மேற்கொள்ள வேண்டும்.