world

img

‘டிப்தீரியா’ தடுப்பு மருந்து பற்றாக்குறை : பாகிஸ்தானில் 100 குழந்தைகள் பலி

இஸ்லாமாபாத், அக்.14-  டிப்தீரியா எனும்  தொண்டை அடைப்பான் நோய் தடுக்கும் ‘டிப்தீரி யா ஆன்ட்டி-டாக்சின்’ உயிர்காக்கும் மருந்து பற்றாக்குறை இருப்பதால் பாகிஸ்தானில் 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியுள்ளனர்.

‘டிப்தீரியே’ என்ற வகை பாக்டீரி யாக்களால் பரவுகிற இந்த நோய் மனி தர்களின் தொண்டையை பாதித்து சுவாசத்தையும் உணவு விழுங்குவ தையும் தடுத்து விடுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு இந்த பாக்டீரியா தொற்று எளிதில் ஏற்பட்டு விடும். 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், வயதானவர்கள் இந்த நோயால் எளிதாக பாதிக்கப்பட்டு விடுவார்கள்.  

இந்த நோயை குணப்படுத்த ‘டிப்தீரி யா ஆன்ட்டி-டாக்சின்’ எனும் உயிர் காக்கும் மருந்து பயன்படுத்தப்படு கிறது. மருந்து பற்றாக்குறை காரண மாக பாகிஸ்தானின் கராச்சி நகரில் மட்டும்  இந்த ஆண்டில்  100-க்கும் மேற் பட்ட குழந்தைகள் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிந்து மாகாண சுகாதார அதிகாரிகளும் இந்த பலி எண்ணிக்கையை உறுதி செய்துள் ளனர். 

பணமின்றி தவிக்கும் அரசு 

டிப்தீரியாவால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையை குணப்படுத்த பாகிஸ் தான் ரூபாயில் 2 லட்சத்து 50 ஆயிரம் வரை  தேவைப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் அரசால் இதனை வாங்க முடியாத சூழல் உள்ளது என தெரிய வந்துள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு முறையான சிகிச்சை இல்லா விட்டால் நோய் தாக்கப்பட்ட 30 சதவீதம் பேர் உயிரிழக்க நேரிடும். குறிப்பாக குழந்தைகளுக்கு இதனால் அதிக ஆபத்து ஏற்படும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.