world

img

அமெரிக்கப் படைத்தளத்தைக் கட்டாதே ஜப்பானில் மக்கள் போர்க்கொடி

டோக்கியோ, டிச.22- ஜப்பானில் அமெரிக்கா அமைத்து வரும் புதிய படைத்தளத்திற்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராடி வரு கிறார்கள். ஜப்பானில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 50 ஆயிரம் பேர் நிறுத்தப் பட்டிருக்கிறார்கள். அந்நாட்டிற்குச் சொந்தமான பல தீவுகள் அமெரிக்க படைத்தளங்களாக மாற்றப்பட்டுள் ளன. அதோடு, மேலும் புதிய, புதிய படைத்தளங்கள் அமைக்கப்படு கின்றன. இத்தகைய படைத்தளங்க ளை அனுமதிக்க வேண்டாம் என்று கூறி ஜப்பானிய மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஒகினாவா பகுதியில்தான் அமெ ரிக்கப் படைவீரர்கள் அதிகமான அள வில் நிறுத்தப்பட்டுள்ளனர். வியட்நாம் மீதான தாக்குதலின்போது இங்கிருந்த படைதான் அனுப்பப்பட்டது.

கிழக்கு ஆசியாவைக் குறிவைத்துதான் இங்கு படைத்தளங்கள் அமைக்கப்பட்டன. இத்தனைக்கும் இந்தப் படைத்தளங்க ளை அமைப்பது மற்றும் பராமரிப்பது போன்றவற்றிற்கான செலவையும் ஜப்பானின் தலையில்தான் ஏற்றியி ருக்கிறார்கள். 75 விழுக்காடு நிதியை ஜப்பான் தனது பட்ஜெட்டில் ஒதுக்கு கிறது.  ஒகினாவா பகுதியில் நடைபெறும் தேர்தல்களில் தொடர்ந்து அமெரிக்கப் படைத்தளங்களுக்கு எதிர்ப்பு தெரி விக்கும் வேட்பாளர்கள்தான் வெற்றி பெறுகிறார்கள். அண்மையில், அப் பகுதியில் உள்ள சாடன் நகர மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியை உள்ளடக்கிய “அனைத்து ஒகினாவா” கூட்டணி சார்பில் 42 வயதாகும் டோகுசி மசாஸ்கி பெரும் வெற்றி பெற்றார்.  

தற்போது நாகோ பகுதியில் உள்ள ஹெனோகோ என்ற தீவு நகரத்தில் புதிய படைத்தளத்தை அமெரிக்கா அமைத்து வருகிறது. அதற்கு எதிராக ஏராளமான போராட்டங்கள் நடந்து வருகின்றன. கடலில் படகுகள் அணி வகுப்புப் போராட்டத்தையும் நடத்தியி ருக்கிறார்கள். அமைதியான பகுதி களை போர் அச்சமுள்ள பகுதிகளாக மாற்றுவதை அனுமதிக்க மாட்டோம் என்று அப்பகுதி மக்கள் கருத்து தெரி வித்துள்ளனர். ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.