பெய்ஜிங், ஜூலை 21- 2011 ஆம் ஆண்டுக்கான ஆள் கடத்தல் அறிக்கையை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் ஜுலை 19 அன்று வெளியிட்டு, சீனா மீது தொடர்ந்து பழிதூற்றியது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பிங் புதனன்று கூறுகையில், உண்மையிலே உலகளவில் ஆள் கடத்தல் வல்லரசு அமெரி க்காதான் என்று சுட்டிக்காட்டி னார். அமெரிக்கா உண்மை களை எவ்வாறு மூடிமறைந்தா லும், அடிமை வியாபார நாடு என்ற தனது வரலாற்றுக் குற்றத்தை மறைக்க முடி யாது. அமெரிக்கா எந்த சாக்குப்போக்கில் விளக்கம் அளித்தாலும், கட்டாய உழைப்புக்கான ஊற்றுமூலம், இடைவழி மற்றும் முனையம் என்ற தனது யதார்த்த குற்ற த்தை மறைக்க முடியாது என்று அவர் தெரிவித்தார். மேலும், ஆள் கடத்தல் எதிர்ப்புக்காக 35 துறைகள் இடம்பெற்றுள்ள அமைப்புமுறை ஒன்றை சீன அரசு உருவாக்கி, தொடர்புடைய இயங்குமுறையை மேம்படுத்தி வருகிறது. ஆள் கடத்தலைத் தடுத்து ஒடுக்கு வதற்கும், கடத்திச் செல்லப்பட்டவர்களை மீட்டெடுத்து பாதுகாப்பதற்கும் இது உறுதியான உத்தரவாதம் அளித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.