world

இலங்கை ஜனாதிபதி தேர்தல் சஜித் பிரேமதாசா போட்டியிலிருந்து விலகல்

கொழும்பு, ஜூலை 19- இலங்கை ஜனாதிபதி தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர்  பதிவில், தான் நேசிக்கும் நாட்டின் நலனுக்காக விலகுவதாக கூறியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் டலஸ் அழகபெருமவை வெற்றிப் பெற கடுமையாக உழைப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலில் இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே, மகிந்த ராஜ பக்சே கட்சியைச் சேர்ந்த டலஸ் அழகப்பெரும, ஜனதா  விமுக்தி பெரமுன கட்சியின் அணுரகுமார திசநாயக்க  ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது.