கொழும்பு, ஏப்.24- இந்தியக் கடனுதவித் திட்டத்தின் கீழ் மேலும் 40 ஆயி ரம் மெட்ரிக் டன் டீசல் இலங் கைக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து ஓரிரு தினங்க ளில் நாட்டின் எரிபொருள் தட் டுப்பாடு சீரடைய வாய்ப்புள்ள தாக இலங்கை மின்சக்தி மற் றும் எரிசக்தித் துறை அமைச் சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். எரிபொருள் தட்டுப்பாட் டையொட்டி கிடைக்கும் எரி பொருளை சமமாக பகிர்ந்த ளிப்பதற்காக இலங்கை அரசு எரிபொருள் மத்திய நிலையம் ஒன்றை அமைக்க உள்ளது எனக் கூறிய காஞ்சன விஜய சேகர, இதற்கான குழுவில் இராணுவம், விமானப்படை, காவல்துறை, ரயில்வே துறை ஆகியவற்றின் பிரதிநிதிகள் இடம்பெறுவர். கடந்த சில நாட்களாக எரிபொருளுக் காக மக்கள் திரள்வதால் போக்குவரத்து பாதிக்கப்படு கிறது. எரிபொருள் கொண்டு செல்லும் பணிக்கு இடையூ றும் ஏற்படுத்தப்பட்டது. இதைக் கருத்தில் கொண்டே மத்திய நிலையம் தொடங்கப்படு கிறது. இந்தியக் கடனுதவித் திட்டத்தின் கீழ் மேலும் 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசல் இலங்கைக்கு கிடைத்துள் ளது. இதன் மூலம் நிலைமை யை சமாளிப்போம் என்றார்.