world

முன்னணியில் கியூபா

ஹவானா, ஜூலை 7- மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்டு வரும் கியூபாவின் பின்லே தடுப்பூசி மையத்தின் செய்திக் குறிப்பின்படி, உலகிலேயே கொரோனாவை எதிர்கொள்ள பூஸ்டர் தடுப்பூசிகளை அதிகமாகச் செலுத்திய நாடாக கியூபா இருக்கிறது. ஜூலை 2 ஆம் தேதி நிலவரப்படி, கியூபாவில் 74 லட்சத்து 6 ஆயிரத்து 592 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவிட்டன.  பூஸ்டர் அதிகமாகச் செலுத்திய நாடுகள் பட்டியலில் கியூபாவுக்கு அடுத்தபடியாக, சீனா, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், ஜெர்மனி,  பிரான்ஸ், பிரேசில், அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா என்று நீளுகிறது. கியூபாவில் 99 லட்சத்து 74 ஆயிரத்து 882 பேருக்கு முழுமையாகத் தடுப்பூசிகளை செலுத்தும் பணி நடந்துள்ளது. இது அந்நாட்டின் மக்கள் தொகையில் 90 விழுக்காடாகும். தடுப்பூசிகளும், பூஸ்டர்  தடுப்பூசிகளும் கியூபாவிலேயே தயாரிக்கப் பட்டவையாகும். எதிர்விளைவுகள் மிகவும் குறைவானதாகவே உள்ளன என்றும் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.