மேற்கு கானாவில் நடந்த வெடி விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு ஆப்பிரிக்கா நாடான கானாவில் உள்ள தங்க சுரங்கத்திற்கு வெடிபொருட்கள் ஏற்றிச் சென்ற லாரி மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரி தீப்பற்றி சிறிது நேரத்தில் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதியில் இருந்த வீடுகள் இடிந்து விழுந்தன. இந்த விபத்தில் 17 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 59 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் நடந்த இடத்தில் ராணுவம் மற்றும் மீட்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.