கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் ரிச்சர்ட் ஜொனாதன் எட்வின் என்ற நபரை டொராண்டோ போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் (21) என்ற மாணவர் கனடாவில் தங்கி படித்து வந்தார். டொராண்டோவில் உள்ள ரெயில் நிலையத்துக்கு கடந்த வியாழக்கிழமை கார்த்திக் வாசுதேவ் சென்றபோது, அங்கு மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் கார்த்திக் வாசுதேவ் உடலில் குண்டு பாய்ந்து அவர் பரிதாபமாக இறந்தார்.
21 வயதான இந்திய மாணவர் கார்த்திக் வாசுதேவ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், சந்தேகத்தின் அடிப்படையில் கனடாவின் டொராண்டோ பகுதியில் ரிச்சர்ட் ஜொனாதன் எட்வின் (39) என்பவரை கைது செய்துள்ளதாக செவ்வாய்க்கிழமை டொராண்டோ காவல்துறை அறிவித்தது.
அதனைதொடர்ந்து டொராண்டோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.