கெய்ரோ, நவ.12- தங்கள் கடன்களை செலுத்த முடி யாததால் கிட்டத்தட்ட 50 ஏழை நாடுகள் திவால் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என்று ஐக்கிய நாடுகள் சபை எச்ச ரிக்கை விடுத்துள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு முன்னதாகவே ஏழை நாடுகள் கடன் வாங்கிக் கட்ட முடியாமல் திணறிக் கொண்டிருந்தன. பெருந்தொற்று கடன் பிரச்சனையை பெரும் நெருக்கடியாக மாற்றி விட்டது. கடன் கொடுத்த நிறு வனங்களும், நாடுகளும் கடனுக்கான வட்டியை அதிகப்படுத்தியுள்ளன. திருப்பித் தர வேண்டிய தொகை பெரும் அளவில் உயர்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது எழுந்துள்ள எரிபொருள்விலை உயர்வு நெருக்கடி மேலும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்று வரும் 27வது காலநிலை மாநாட்டில் பேசிய ஐக்கிய நாடுகள் சபையின் உலக வளர்ச்சித் திட்டத்தின் தலைவர் அசிம் ஸ்டெய்னர் இது குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அப்போது பேசிய அவர், “எரிபொருள் விலையுயர்வும், வட்டிவிகிதங்கள் அதிகரித்திருப்பதும் பெரும்பாலான நாடுகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. அந்நாடுகள் கடன்களைத் திரும்பச் செலுத்த முடி யாத நிலை உருவாகியிருக்கிறது. இந்நிலை அந்நாட்டு மக்கள் மீது பெரும் பேரழிவுத் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று கூறியுள்ளார்.
இந்த நாடுகளை ஐக்கிய நாடுகள் சபையின் உலக வளர்ச்சித் திட்ட அமை ப்பு பட்டியலிட்டுள்ளது. அந்த அமைப் பின் கணக்கின்படி ஏழை நாடுகள் மட்டு மல்லாமல், நடுத்தர நாடுகளும் நெருக் கடியில் சிக்கியிருக்கின்றன. ஆனால், பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ள ஏழை நாடுகளைப் பட்டியலிட்டு, உடனடி யாக உதவிகள் தரப்படவில்லை என்றால், பேரழிவுக்கு இட்டுச் செல்லும் என்று எச்சரித்துள்ளார்கள். இது குறித்துப் பேசிய ஸ்டெய்னர், “எங்கள் பட்டியலில் 54 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த நாடுகள் தங்கள் கடன்களைக் கட்ட முடியாமல் திவாலாகும் நிலையில் உள்ளன. அதோடு, எரிபொருட்களின் விலைகள் உயர்ந்து கொண்டே வருகின்றன. இத னால் வட்டி விகிதம் மேலும் அதிக ரிக்கவே வாய்ப்புள்ளது. ஏராளமான நாடுகள் தங்கள் கடன்களைக் கட்ட முடியாமல் திணறப் போவதை நாம் பார்க்கவிருக்கிறோம். பணக்கார நாடு கள் முன்வந்து உதவி செய்யா விட்டால் திவால் நிலை என்பது தவிர்க்க முடியாததாகும்” என்றார்.
வாக்குறுதிகளைக் காப்பாற்றுங்கள்
உதவி செய்வோம் என்று ஒவ்வொரு முறையும் மாநாடுகளில் வளர்ந்த நாடு கள் வாக்குறுதிகளைக் கொடுத்து வரு கின்றன. அந்த வாக்குறுதிகள் மாநாடு களிலேயே முடிந்து போகின்றன என்று குற்றம் சாட்டும் ஸ்டெய்னர், “கடன் நெருக்கடியைத் தீர்க்காவிட்டால் இது போன்ற காலநிலை மாற்ற மாநாடுக ளால் எந்தவித பலனும் இருக்கப் போவ தில்லை. இந்த ஏழை நாடுகளால் கால நிலை மாற்றத்திற்கு எதிராக எதுவும் செய்ய முடியாது. ஏழை நாடுகளுக்குத் தருவதாக பணக்கார நாடுகள் சொன்ன தொகை தரப்படுவதில்லை” என்று சுட்டிக்காட்டினார். காலநிலை மாற்ற மாநாட்டில் பேசிய ஐக்கிய நாடுகள் சபையின் பொ துச் செயலாளர் அன்டோனியோ குட் டெரெஸ், “மீட்க முடியாத நிலையை நோக்கி இந்த உலகம் சென்று கொண்டி ருக்கிறது. 100 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி குறித்த ஒரு ஒன்றிணைந்த பாதையை இந்த மாநாடு உருவாக்க வில்லை என்றால், வளரும் மற்றும் ஏழை நாடுகள் கால நிலை மாற்றம் பற்றி யோசிப்பதையே நிறுத்தி விடும் நிலை ஏற்படும்” என்று எச்சரித்தார்.