world

img

தீக்கதிர் உலக செய்திகள்

அமெரிக்க கடனை  மறுக்கும் அதானி 

இலங்கையின் தலைநகர் கொழும்புவில் உள்ள துறைமுகத்தில் முதலீடு செய்வதற்காக அதானியின் நிறுவனம் அமெரிக்க நிறுவனத்திடம் கேட்ட, கடன் வாங்கும் முடிவை திரும்பப்பெறுவதாக கூறியுள்ளது.அமெரிக்க சர்வதேச வளர்ச்சி நிதி  நிறுவனத்திடம் சுமார் 553 மில்லியன் டாலர் கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில் அந்த கோரிக்கையை திரும்பப்பெற்றதாக அறிவித்துள் ளது. அமெரிக்க முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்ற பணத்தில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அதானி நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்ட பிறகு இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.  

ஆப்கனில்  குண்டு வெடிப்பு 

ஆப்கன் தலைநகர் காபூலில் நடந்த குண்டுவெடிப்பில் தலிபான் அரசின் அகதிகளுக்கான துறையின் அமைச்சர் கலீல் ரஹ்மான் ஹக்கானி பலியாகியுள்ளார். காபூலில் உள்ள தலிபான் அகதிகளுக்கான அமைச்சரக கட்டடத்தில் இந்த குண்டுவெடிப்பு நடந்தது. இதில் அமைச்சர் கலீல் ஹக்கானி மற்றும் அவருடன் அலுவலகத்தில் இருந்த 6 பேரும் பலியாகியுள்ளார்கள் என தலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் குறித்து ஆப்கன் அரசு அதிகாரிகள் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

காசாவில் நாளுக்கு நாள்  அதிகரிக்கும் பஞ்சம் 

காசா முழுவதும் உணவு பஞ்சம் மிக  கடுமையாக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் ஐநா நிவாரண வாகனங் களை காசா பகுதிக்குள் அனுப்பாமல் தடுத்து வரு வதால் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். பாலஸ்தீன மக்களுக்கு கொடுக்கப்படும் கிழங்கு, கோதுமை மாவுகள் உள்ளிட்ட  முக்கிய உணவுப்பொருட் களின் இருப்பும் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் ஒவ்வொரு நாளும் போதிய உணவு உண்ண முடியாமலும், கிடைக்காமலும் பெண்கள் குழந்தைகள்  மரணத்தில் தள்ளப்பட்டு வருகிறார்கள்.

400 பில்லியன் சொத்துமதிப்பை  அடைந்த எலான் மஸ்க் 

அமெரிக்க ஜனாதிபதி  தேர்தலில் டிரம்ப்பின் ஆதரவாளராகவும் பிரச்சாரகராகவும் இருந்த எலான் மஸ்க் இன் சொத்து மதிப்பு டிரம்ப் வெற்றிக்கு பிறகு 400 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. புளூம்பெர்க் ஆய்வின் அடிப்படையில் இது தெரிய வந்துள்ளது. மேலும் உலக வரலாற்றிலேயே 400 பில்லியன் டாலர் நிகர சொத்துமதிப்பை அடைந்த முதல் நபராக எலான் மஸ்க் இடம் பெற்றுள்ளார். டிரம்ப் வெற்றிக்குப் பிறகு அவரை அமெரிக்காவின் செயல் திறன் துறையின்  தலைவராக நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உக்ரைனுக்கு  ரஷ்யா எச்சரிக்கை

அமெரிக்கா வழங்கிய அதிக தூரம் சென்று தாக்கும் ( ATACMS ) ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷ்யாவின் விமான நிலையத்தில் உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு நிச்சயமாக பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் ஆயுதங்களை பயன்படுத்துவதை நிறுத்தவில்லை என்றால் ஆர்செனிக் என்ற புதிய வகை அதிநவீன ஹைப்பர்சோனிக்  பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்தி  மீண்டும் தாக்குவோம் என ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன் இந்த ஏவுகணையை உக்ரைன் மீது ரஷ்யா பயன்படுத்தியதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.