எங்கும் தப்பி ஓட முடியாமல் சிக்கிக் கொண்ட பாலஸ்தீன மக்கள் மீது வேண்டு மென்றே இஸ்ரேல் ராணுவம் குண்டுக ளை வீசுகிறது என அமெரிக்காவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, தனது இன்ஸ் டாகிராம் பதிவில் குற்றம்சாட்டி கடுமையாக விமர்சித்துள்ளார்.
அப்பதிவில், ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசியதால் ஏற்பட்ட பாதிப்பை காட்டும் புகைப் படத்துடன் அவர் எழுதி இருப்பதாவது; கிட்டத்தட்ட இருபது ஆண்டு களாக காசா ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக உள்ளது. தற்போது அதை மிகப்பெரும் சுடுகாடாக இஸ்ரேல் ராணுவம் மாற்றி வருகிறது. இஸ்ரேலால் கொல்லப்பட்டவர்களில் 40 சதவீதம் பேர் அப்பாவிக் குழந்தைகள். மேலும் குடும்பங்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்படுகின்றன.
உலகின் கண்முன்பே குழந்தைகள், பெண்கள், குடும்பங் கள் என லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் சர்வதேச சட்டத்தை மீறி உணவு, மருந்து மற்றும் மனிதாபிமான உதவிகள் இல்லாமல் ஒட்டுமொத்தமாக தண்டிக்கப்பட்டு வருகிறார்கள்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கொண்டுவரும் மனிதாபிமான உதவிகள் மற்றும் போர்நிறுத்த வேண்டுகோளை மறுப்பதன் மூலம் உலகத் தலைவர்கள் இந்த குற்றங்களுக்கு உடந்தை யாக உள்ளனர். இவ்வாறு அவர் தனது பதிவில் மிகக் கடுமை யாக விமர்சித்துள்ளார்.