காசாவில் நுசைரத் அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசியதில் சர்வதேச செய்தி நிறுவனமான அல் ஜசீரா வின் காசா பிரிவு செய்தியாளர் வாஹ்ல் அல்-தஹ்தூஹினின் மனைவி, மகன்கள், மகள் ஆகிய 4 பேரும் கொல்லப்பட்டனர். 53 வயதான அல்-தஹ்தூஹின் பல ஆண்டு களாக பாலஸ்தீனப் போர் பற்றி செய்தி களை சேகரித்து வந்தவர்.
காசா பகுதியில் மக்கள் இருப்பி டங்களின் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் குண்டுகளை வீசி வரும் நிலையில் அல்-தஹ்தூஹின் குடும்பத்தினர் இடம் பெயர்ந்து நுசைரத் அகதிகள் முகாமில் தங்கியிருந்தனர். அந்த அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குத லில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர்.
செய்தி அறிந்து அல் அக்ஸா மருத் துவமனைக்கு வந்த அல்-தஹ்தூஹின் தனது இறந்த மகனின் சடலத்தைக் கைகளில் ஏந்தியிருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. “எங்களைப் பழி வாங்க எங்கள் குழந்தைகளைக் கொன்று குவிக்கின்றனர்” என அவர் செய்தியாளர்க ளிடம் கண்ணீர் மல்க கூறினார்.