world

img

ஜெருசலேமில் அல்- அக்ஸா மசூதியில் பயங்கர மோதல்- 117 பாலஸ்தீனியர்கள் படுகாயம்

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இஸ்ரேல் தொடர்ந்து பாலஸ்தீனத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்று வருகிறது. இதற்கு பாலஸ்தீனம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  

இந்நிலையில் , இஸ்ரேலில் ஜெருசலேம் பகுதியில் உள்ள டெம்பிள் மவுண்ட் பகுதியில் இஸ்லாமிய மத வழிபாட்டு தளமான அல்-அக்சா மசூதி இங்கு உள்ளது. கிறிஸ்தவ மதத்தின் புனித தளமும், யூத மதத்தின் புனித தளமும் இந்த டெம்பிள் மவுண்ட் பகுதிலேயே அமைந்துள்ளது.  இந்த பகுதியில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது.

இஸ்லாமிய மதத்தினரின் புனித பண்டிகைகளில் ஒன்றான ரமலான் மாதம் தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலில் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு ஜெருசலேமில் உள்ள அல்-அக்சா இஸ்லாமிய மத வழிபாட்டுத்தளத்தில் பாலஸ்தீனியர்கள் இன்று காலை வழக்கமான வழிபாடு செய்தனர். வழிபாடு நடைபெற்ற பின்னர் மதவழிபாட்டுதளத்தை விட்டு வெளியேபோது இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் , பாலஸ்தீனர்களுக்கும் இடையே அங்கு மோதல் வெடித்தது. இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகைக்குண்டுகள், ரப்பர் குண்டுகளை பயன்படுத்தினர். இருதரப்பிற்கும் இடையே நடந்த இந்த மோதலில் 117  பாலஸ்தீனர்கள் படுகாயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது.    

முன்னதாக, கடந்த ஆண்டு இதே அல்-அக்சா மத வழிபாட்டு தளத்தில் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலிய படையினருக்கும் இடையே நடந்த மோதல் போரில் முடிந்தது. 11 நாட்கள் நடந்த இந்த போரில்  மேற்குகரையில் மொத்தம் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.