world

img

ஜனாதிபதி மாளிகையை மக்கள் கைப்பற்றினர்

கோத்தபய ராஜபக்சே தப்பியோட்டம்

கொழும்பு, ஜூலை 9- இலங்கையை கடும் பொருளாதார நெருக் கடிக்குள் தள்ளி, அத்தியாவசியப் பொருள்கள் கூட கிடைக்காமல் , வாழ்வாதாரத்தையே சீர ழித்ததால் கொந்தளித்த இலங்கை மக்கள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே பதவி வில கக்கோரி அந்நாட்டு ஜனாதிபதி மாளிகையை  ஜூலை 9 சனிக்கிழமையன்று கைப்பற்றி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்களின் ஆவேசத்திற்கு பயந்து ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே தப்பியோடினார்.  தற்போது இலங்கை ஜனாதிபதியாக கோத்தபய ராஜபக்சே உள்ளார். இவரின் சகோ தரர் மகிந்த ராஜபக்சே ஏற்கனவே ஜனாதிபதி யாகவும் பிரதமராகவும் இருந்தவர். ராஜ பக்சேக்கள் முன்னெடுத்த பெரும்பான்மை இன வாத அரசியல், மக்கள் விரோத நடவடிக்கை களால் இலங்கை நாடு கடும் பொருளா தார நெருக்கடிக்குள் சிக்கித் திணறுகிறது.  மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை.

எரி பொருள் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட் கள் கூட கிடைக்கவில்லை. கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மக்கள் கொந்தளித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்ற னர். மக்களின் போராட்டத்திற்கு பணிந்து, மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதையடுத்து புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றார். ஆனா லும் பொருளாதார நெருக்கடி சீராகவில்லை. இதனால் மேலும் ஆவேசமடைந்து ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரியும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எதிராக வும் மக்கள் போராட்டத்தை தொடர்கின்றனர்.  இந்நிலையில், ஜூலை 9 அன்று அரசுக்கு எதிரான மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், விவசாய அமைப்புகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருந்தன.

இதனைத்தொடர்ந்து ஜனாதிபதி கோத்த பய ராஜபக்சே பதவி விலகக்கோரி நாடுமுழு வதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கொழும்பு நகரில் குவிந்து போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர். ஜனாதிபதி மாளிகையை நோக்கி  திரண்டு வரும் மக்களை தடுக்க முடியாமல் பாது காப்புப் படையினர் திணறி வருகின்றனர். மக்க ளின் ஆவேச எழுச்சிக்கு பயந்து ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே மாளிகையில் இருந்து தப்பியோடி விட்டதாக தகவல் வெளியாகி யுள்ளது. ஆயுதங்களுடன் சுமார் 20 ஆயிரம் பாது காப்புப் படையினர் கொழும்பு நகரில் குவிக்கப்  பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக கொழும்பு நகரின் பல பகுதிகளில் ஊர டங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  ஆனால் போராட்டத்துக்கு தடையில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், ஊர டங்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதேசமயம் கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட் டுள்ளது.

‘கோட்டா வீட்டுக்குப் போ’ 

இந்நிலையில் தொடர் போராட்டத்தை மேற்கொள்ள சிவில் உரிமை ஆர்வலர்கள், மதத்  தலைவர்கள், கலைஞர்கள் மற்றும் பலர் தலை நகர் கொழும்புவில் கடற்கரைக்கு அருகிலுள்ள  ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் குவிந்துள்ள னர்.  நாடு முழுவதிலுமிருந்து பேருந்துகள், ரயில்  கள் மற்றும் டிரக்குகளில் வந்து லட்சக்கணக்  கான மக்கள் கொழும்பு நகரில் குவிந்துள்ள னர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கறுப்பு மற்றும் தேசி யக் கொடிகளை ஏந்தி, ‘கோட்டா வீட்டுக்குப் போ‘ என முழக்கத்துடன் போராட்டம் நடத்தி வரு கின்றனர். கோத்தபய ராஜபக்சேவின் அதிகாரப் பூர்வ இல்லத்திற்கு அருகிலுள்ள ராணுவத் தடுப்புகளை வெள்ளியன்று இரவு உடைத்து  மக்கள் உள்ளே புக முற்பட்டனர். இதனை யடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டி ருந்த ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி எறிந்து அவர்களை விரட்டினர்.

இருப்பினும் சனிக்கிழமையன்று காவல்  துறையினர் வைத்த தடுப்புகளைத் தாண்டி  கோத்தபயவின் வீட்டை நோக்கி போராட்டக்கா ரர்கள் முன்னேறினர். பிரதான வாயில் மீது ஏறி இல்லத்துக்குள் நுழைந்தனர். மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த இருக்கைகளில் அமர்ந்திருக்கும் காட்சிகளும், நீச்சல் குளத்தில் குளிக்கும் காட்சிகளும் வெளி யாகின.  கண்ணீர்ப்புகைக் குண்டுவீச்சால் காயம டைந்த பலர் மருத்துவமனைக்கு அழைத்துச்  செல்லப்படும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. ஒரு பாதுகாப்புப் படை வீரர் உள்பட 33 பேர்  காயமடைந்திருப்பதாக கொழும்பு தேசிய மருத்துவமனை தெரிவித்துள்ளது. 3 பேர் கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

அவசரக் கூட்டத்திற்கு  பிரதமர் அழைப்பு 

ஜனாதிபதி மாளிகையை மக்கள் கைப்பற்றி யுள்ள நிலையில் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே கட்சித் தலைவர்களின் அவசரக் கூட்டத்  திற்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் நாடா ளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையில் அனைத்துக் கட்சி ஆட்சிக்கு வழி வகுக்கும் வகையில்  இலங்கை பிரதமர்  ரணில் விக்ரமசிங்கே, பதவி விலகத் தயாராக  இருப்பதாக அவரது அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.  நகரின் பல இடங்களில் கலவரத் தடுப்பு  போலீஸாரும் ராணுவத்தினரும் நிறுத்தப்பட் டுள்ளனர். ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல் லத்தை இணைக்கும் எல்லா சந்திப்புகளையும் காவல்துறையினர் தடுப்புகளைக் கொண்டு அடைத்துள்ளனர்.

‘கட்டுப்படுகிறேன்’ 

இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் தலை மையில் அனைத்துக்கட்சிக்கூட்டம் நடைபெற வுள்ளது.இந்நிலையில் ‘பதவி விலகும் கோரிக்கை பற்றி அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுகிறேன்’ என்று ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இலங்கை ஜனாதிபதியாக  பிரதமர் ரணில்விக்கிரமசிங்கே அல்லது நாடா ளுமன்ற சபாநாயகர் ஆகியோர் செயல்பட லாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.