world

இலங்கைக் கடற்படை தாக்குதல்

இராமேஸ்வரம், அக்.22- இராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற ஐந்து விசைப்படகுகள் மற்றும் 27 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறைப் பிடித்தனர். இத னை கண்டித்தும், படகுகள் மற்றும் மீன வர்களை விடுக்க கோரி ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இந்தநிலையில் ஐந்து நாட்களுக்கு பிறகு சிறிய படகுகள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று, சனிக்கிழமை 152 விசைப் படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்த நிலையில், கச்சத்தீவு அருகே மீனவர்கள் நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீன வர்கள் மீது தாக்குதல் நடத்தி மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். மேலும் விசைப்படகுகளில் உள்ள மீன்பிடி வலைகளை அறுத்து கடலில் வீசினர். இத னால் பல ஆயிரம் மதிப்பிலான மீன் பிடி சாதனங்கள் இழப்புடன் மீனவர்கள் ஞாயிறு காலை கரை திரும்பினர்.