world

img

2026ஆம் ஆண்டுக்குள் புவி வெப்பநிலை 1.5°C உயர வாய்ப்பு: உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை!

2026ஆம் ஆண்டிற்குள் ஏதாவது ஒரு ஆண்டில் புவியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு மேல் உயர்வதற்கு வாய்ப்பு உள்ளதாக உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.

Global Annual to Decadal Climate Update எனும் பெயரில் அடுத்த ஐந்து ஆண்டுகள் உலக வானிலையின் முன்கணிப்பை உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ளது.

புவி வெப்பநிலையை தொழிற்புரட்சிக்கு முந்தைய அளவைவிட (1850-1900 வரையிலான சராசரி புவி வெப்பநிலை) 1/5° செல்சியஸ் அளவிற்கு உயர விடாமல் தடுப்பதற்காகத்தான் பாரிஸ் ஒப்பந்தத்தில் உலக நாடுகள் கையெழுத்திட்டன. ஆனால், இந்த 1.5° செல்சியஸ் உயர்வை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் வரும் ஏதாவது ஒரு ஆண்டில் தற்காலிகமாக புவி எட்டிவிடும் என உலக வானிலை அமைப்பு தனது அறிக்கையில் எச்சரித்துள்ளது.

மேலும் இதுவரை பதிவானதிலேயே அதிக வெப்பநிலை பதிவான ஆண்டாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு ஆண்டு இருப்பதற்கு 93% வாய்ப்பிருப்பதாகவும் உலக வானிலை அமைப்பு கணித்துள்ளது. (2016ம் ஆண்டுதான் வரலாற்றில் அதிக வெப்பமான ஆண்டாகும்)

இதுகுறித்து உலக வானிலை அமைப்பின் தலைவர் பெத்தாரி தாலஸ் கூறுகையில், “நாம் தொடர்ந்து பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றிக் கொண்டிருக்கும் வரையில் புவியின் சராசரி வெப்பநிலை உயர்ந்து கொண்டே இருக்கும். இதனுடன் சேர்ந்து நம் கடல்களும் தொடர்ந்து வெப்பமடைந்து அமிலமாகிக் கொண்டிருக்கும், பனிப் பாறைகளும், படுகைகளும் உருகிக் கொண்டேயிருக்கும், கடல் நீர்மட்டம் உயர்ந்து கொண்டும் புவியின் வானிலையானது மிகத் தீவிரமாக மாறுபாடு அடையும், ஆர்டிக் பகுதியில் வெப்பநிலை உயரும் அந்த வெப்பநிலை உயர்வானது புவியில் வாழும் அனைவரையும் பாதிக்கும்” என தெரிவித்துள்ளார்.