world

காவலர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 அதிகாரிகள் பலி

இலங்கை, டிச.25- இலங்கையில் திருக் கோவிலூர்-அம்பாறை கால்நிலையத்தில் காவலர்  ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்தில் மூன்று பேரும் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பலனின்றி ஒருவரும் உயிரிழந்தார்.  மூன்றுபேர் காயமடைந்துள் ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய காவலர் உயரதி காரியிடம் தமக்கு விடுமுறை  அளிக்கக் கேட்டதாகவும் அதி காரி மறுத்த நிலையில் துப் பாக்கிச்சூடு நடத்தியுள்ள தாகவும் கூறப்படுகிறது. பின்னர் அந்தக் காவலர் காவல் நிலையத்தில் சரண டைந்து இரண்டு டி-56 ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை ஒப்படைத் தார். காவலரை கைது செய் துள்ளதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர்  நிஹால் தல்துவா தெரிவித்தார்.