world

img

ராணுவச் செலவில் 2 விழுக்காட்டை வெட்டுங்கள் நோபல் விருதாளர்கள் வலியுறுத்தல்

ரோம், டிச.25- தங்கள் ராணுவச் செலவுகளை வெட்ட வேண்டும் என்று உலகின் அனைத்து நாடுகளுக்கும் வேண்டு கோள் விடுத்து 50க்கும் மேற்பட்ட நோபல் விருதாளர்கள் கடிதம் எழுதியிருக்கிறார்கள். இந்தியாவில் பிறந்து தற்போது பிரிட்டனில் வசித்து வரும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் இதில் கையெழுத்திட்டுள்ளனர். ஒவ்வொரு நாடும் தங்கள் ராணுவத்திற்கான ஒதுக்கீட்டில் 2 விழுக்காடு செலவை வெட்ட வேண்டும் என்று கோரியுள்ள அவர்கள், இந்த செலவு வெட்டால் கிடைக்கும் நிதியை  கோவிட் 19, சுற்றுச்சூழல் மாற்றம் மற்றும் கடுமையான வறுமை ஆகிய பிரச்சனைகளை எதிர்கொள்ளப் பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள சர்வதேச அமைதி ஆய்வு மையம் திரட்டிய புள்ளிவிபரங்களின்படி உலகம் முழுவதும் ராணுவத்திற்காக ஆயிரக்கணக்கான கோடி டாலர்கள் செலவாகின்றன என்று தெரிய வந்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் 1,98,100 கோடி டாலர்களை உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்கள் செலவழித்துள்ளன. அதற்கு முந்தைய ஆண்டைவிட 2.6 விழுக்காடு செலவு அதிகரித் துள்ளது.

அமெரிக்காவின் தூண்டுதலால் உலகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நாடுகள் மோதிக் கொண்டி ருக்கின்றன. ஏமன் மீது ஒவ்வொரு நாளும் சவூதி அரேபியா குண்டுகளை வீசிக் கொண்டிருக்கிறது. உக்ரை னுடனான ரஷ்யாவின் கருத்து வேறுபாடுகளைப் பயன்படுத்திக் கொள்ள அமெரிக்கா விரும்புகிறது. சீனாவுக்கு எதிராகப் பல்வேறு நாடு களை அமெரிக்கா திரட்டி வருகிறது. இவையனைத்தும் ஆயுதப் போட்டியை உருவாக்கியுள்ளது. தங்களது கடிதத்தில், 2000 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை யிலான ராணுவச் செலவு இரட்டிப் பாகியுள்ளது. மற்றவர்கள் செல வழிக்கிறார்கள் என்று காரணம் காட்டி ஒவ்வொரு நாடும் தனிப்பட்ட முறையில் தனது செலவை அதிக ரித்துக் கொள்கிறது. வளங்கள் வீணாக்கப்படுகின்றன. புத்திசாலித் தனமாக இவற்றை நல்ல பணிக ளுக்காக நாம் செலவிட்டிருக்கலாம் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள். எப்படிச் செய்யலாம் என்று  ஆலோசனையும் தெரிவித்துள்ளனர். ஐ.நா.சபையின் உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்தி ராணுவச் செலவைக் குறைக்கலாம்.  2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி டாலர்களை இதன் மூலம் நாம் சேமிக்க முடியும். ஒத்துழைப்பின் மூலமே மனிதகுலம் சந்திக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் என்று நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.