லண்டன், டிச.31- அண்டை நாடுகளோடு ஒப்பிடுகையில் ஐரோப்பியக் கண்டத்தின் வட மேற்குப் பகுதியின் ஏழை நாடாக பிரிட்டன் மாறிவிட்டதாகப் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரி வித்துள்ளனர். உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவின் தடைகளைப் பின்பற்றியதால் ஐரோப்பிய நாடுகளும் நெருக்கடியில் சிக்கி யுள்ளன. விலைவாசி உயர்வு மற்றும் எரிபொருள் பற்றாக் குறை சாதாரண மக்களைப் பாதித்ததோடு, எரிபொருள் இல்லாததால் ஏராளமான நிறுவனங்கள் தங்கள் பணிக ளைச் செய்ய முடியாமல் திணறுகின்றன. இதனால் தங்கள் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு ஊதியத்தைத் தர முடியவில்லை. தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகளும் இந்த நெருக்கடிக்கு தப்பவில்லை. பிரிட்டனில் அனைத்துத் துறையினரும் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர். நெருக்கடியில் இருந்து தப்பிக்க ஊதிய உயர்வு மற்றும் பணியிடச் சூழல்களில் மாற்றம் மிகவும் அவசியம் என்று கோரி வருகிறார்கள். பல ஆண்டுக ளுக்குப் பிறகு வேலை நிறுத்தப் போராட்டங்கள் அதிகரித் துள்ளன. உக்ரைன் போரைச் சுட்டிக்காட்டி, அரசு மற்றும் நிர்வாகங்கள் பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கின்றன.
2023-ஆம் ஆண்டில் நெருக்கடி முற்றும் என்று வல்லு நர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். அவர்கள் மேற்கொண்ட ஆய்வில், மொத்த தேசிய வரு மானத்தின் தனிநபர் சராசரி பெரும் சரிவைச் சந்தித்திருக்கி றது. அண்டை நாடுகளோடு ஒப்பிடும்போது பிரிட்டனின் நிலை மோசமாக உள்ளது. அருகில் உள்ள லக்சம்பர்க், நார்வே, அயர்லாந்து, ஸ்விட்சர்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து, ஸ்வீடன், ஜெர்மனி, ஆஸ்திரியா, பெல்ஜியம், பின்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் சராசரியுடன் ஒப்பீடு செய்திருக்கிறார்கள். இந்த நாடுகள் அனைத்துமே பிரிட்டனை விட அதிக சராசரியைப் பெற்றிருந்தன. 2021-ஆம் ஆண்டுக்கான தேசிய மொத்த வரு மானத்தின் தனிநபர் சராசரி பிரிட்டனில் 41 ஆயிரம் பவுண்டு களாக இருந்தபோது, அயர்லாந்தில் 67 ஆயிரம் பவுண்டு களாக இருந்தது. இதைச் சுட்டிக்காட்டியுள்ள ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பால் மக்லென்னன், அயர்லாந்தைப் போன்ற அந்தஸ்து ஸ்காட் லாந்துக்கு கிடைக்க வேண்டும். அப்போதுதான் நமது பொரு ளாதாரத்தையும் அது போன்று வளர்த்தெடுக்க முடியும் என்று கூறியிருக்கிறார்.
வல்லுநர்களின் கருத்தான ‘‘வடமேற்கு ஐரோப்பாவின் ஏழை’’ என்ற பிரிட்டன் குறித்த வர்ணனையை மக்லென் னன் ஆமோதிக்கிறார். இது பற்றிப் பேசிய அவர், ‘‘தனிநபர் செல்வ விகிதத்தில் மிகக்குறைவாகவே பிரிட்டன் இருக்கி றது. கடந்த 20 ஆண்டுகளில் அண்டை நாடுகளை விட படு மோசமான நிலையை அடைந்துள்ளது’’ என்கிறார். பிரத மரை மாற்றியதால் எந்தப் பலனும் இல்லை என்றும் வல்லு நர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். ‘‘பொருளாதாரம் முன்னேற வேண்டும் என்றால், அது வளர்வதற்குத் தேவையான ஆற்றல் தேவை. ஊதியம் என்பதுதான் அந்த ஆற்றலாகும். 2010-ஆம் ஆண்டில் இருந்து ஊதியம் மதிப்பிழந்து விட்டது. தொழிலாளர்களின் கைகளில் மிகக் குறைவான பணம் உள்ளது. அதனால் வர்த்தகமும் பாதிக்கப்பட்டிருக்கிறது’’ என்று தொழிற்சங்கத் தலைவர்களின் ஒருவரான பால் நோவக் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவும் இப்படித்தான்...
ஃபைனான்சியல் டைம்ஸ் நாளிதழ் மேற்கொண்ட ஆய்வில், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளுமே சில பணக்காரர்களைக் கொண்ட ஏழை நாடுகளாக மாறி விட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகமாக இருந்தாலும், பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்குமான இடைவெளி பெருமளவில் அதிகரித்திருக்கிறது. வரும் ஆண்டுகளில் ஸ்லோவேனியா மற்றும் போலந்து மக்கள் கூட பிரிட்டன்காரர்களை விட நல்ல நிலைமையில் இருப்பார்கள் என்று அந்த ஆய்வு கூறுகிறது.