world

img

முடக்கப்பட்ட ஊதிய உயர்வை மீட்போம் !

ரியோ டி ஜெனிரோ,டிச.31- கடந்த ஐந்து ஆண்டுகளாகவே ஊதியத்தில் எந்தவித உயர்வும் இல்லாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ள நிலைமையைத் தகர்ப்போம் என்று பிரேசிலின் அரசு ஊழியர்கள் உறுதி எடுத்துள்ளனர். பிரேசிலில் வலதுசாரி ஜனாதிபதி போல்சானரோ ஆட்சிக்கு வந்தபிறகு நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வரு கிறார்கள். ஊதிய உயர்வே இல்லாமல் 2017 ஆம் ஆண்டில் வாங்கிய அதே ஊதி யத்தை அரசு ஊழியர்கள் பெற்று வரு கிறார்கள். பொருளாதார நெருக்கடி யைக் காட்டி வந்த வலதுசாரி அரசு, கொரோனாக் காரணம் காட்டி தற்போது  ஊதியத்தை உயர்த்த மறுத்து வருகிறது.

இந்த ஐந்தாண்டு காலத்தில் விலை வாசி கடுமையாக உயர்ந்துள்ளது. பணவீக்கம் 27 விழுக்காட்டைத் தாண்டி யிருப்பதாக அரசு ஊழியர்கள் தெரி விக்கின்றனர். இதனால் நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு கடுமையான  இழப்பு ஏற்பட்டிருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.  பொதுவாக, பணவீக்கம் அதிகரிக்கும்போது, மேற்கொள்ளப்படும் அகவிலைப்படி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு போன்ற வற்றிற்கு வலதுசாரி அரசு முற்றுப் புள்ளி வைத்துவிட்டதால்தான் இத்தகைய இழப்பு என்பது அவர்களின் கருத்தாகும். 2022 ஆம் ஆண்டு துவக்கத்தி லேயே வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட அரசு ஊழியர் சங்கங்கள் முடிவு செய்துள் ளன.

அதற்கான தேதிகள் இறுதிப் படுத்தப்பட்டு ஊழியர்கள் மத்தியில் சுற்றுக்கு விடப்பட்டுள்ளன. இந்த இயக்கங்களில் பங்கேற்க 27 ஊழியர் சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களிடம் அனுமதி பெற்றிருக்கின்றன. இந்த சங்கங்களில் 2 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஜனவரியில் இருந்தே போராட்டக் களம் சூடு பிடிக்கப் போகிறது. 2022 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்  ஆண்டு என்பதால் ஆட்சியாளர்கள் மீது அழுத்தம் விழும் என்று ஊழி யர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது. தற்போது வரையில் வெளியாகியுள்ள கருத்துக் கணிப்புகளில் முன்னாள் ஜனாதிபதியும், இடதுசாரியுமான லூலா வெல்வார் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.